செய்திகள் :

தேனி: அரசு மருத்துவமனை வார்டுகளில் சுற்றித் திரியும் எலிகள்; நோயாளிகள் அச்சம்!

post image

தேனி மாவட்டம், கானா விலக்கில், அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தேனி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கேரளம் மாநிலத்தில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புற நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

மேலும் ஆயிரக்கணக்கான உள் நோயாளிகளும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சையும் எடுத்துக்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் உள் நோயாளிகளின் வார்டுகளில் எலிகள் சுற்றித் திரிவதால், நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நோயாளிகளின் படுக்கையில் சர்வ சாதாரணமாக எலிகள் சுற்றித் திரிந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளையும் சாப்பிட்டுச் செல்வதால், நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கின்றனர்.

உள் நோயாளிகள் தங்கும் வார்டு பகுதியில் போதிய சுகாதாரமின்றி இருப்பதால், இது போன்று எலிகள் தொல்லை இருப்பதாகவும், இரவிலும் எலிகளின் கூச்சல் சத்தத்தால் தூங்க முடியாமல் அவதி அடைந்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றன.

தேனி மருத்துவமனையில் சுற்றித் திரியும் எலிகள்

இந்த நிலையில் மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை எடுக்கும் நோயாளி ஒருவர் எலிகள் சுற்றித் திரியும் வீடியோ கட்சியினை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தவெக அமைச்சரவையில் இடம்பெறும் திருமாவளவன்? திருச்சி கிழக்கில் இடைத் தேர்தலில் போட்டியா?

த.வெ.க அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்புவிடுத்த நிலையில், வி.சி.க சார்பில் அதன் தலைவர் திருமாவளவனே அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார் என்கிறார்கள... மேலும் பார்க்க

ஆந்திரா: `நீண்டகாலத் திட்டமிடல் இல்லாமல் வெறுமனே...' - விவாதத்துக்குள்ளாகும் அரசின் திட்டம்!

மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டபோது, தென் மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால், பெரும் சிக்கலுக்கு உள்ளாகின. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இந்த த... மேலும் பார்க்க

மதுரை : 'ஆதார் அட்டையைக் காண்பித்து மது வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள்' – காரணம் என்ன?

தமிழ்நாட்டில் கோயில்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும், மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கக் கூடாது, அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: ``தமிழ்நாடு அரசு, மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவா?" - அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்!

தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) மும்மொழிக் கொள்கை போன்ற அம்சங்களை முந்தைய தி.மு.க அரசு எதிர்த்ததால், மத்திய அரசு 'சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்திற்கான சுமார் ரூ. 3,500 கோடி கல்வி நிதியை நிறுத்தி... மேலும் பார்க்க

தொழில்துறைக்கு மட்டும் தானா, அப்போ முதலீட்டிற்கு? வெள்ளி இறக்குமதியில் 'கட்டுப்பாடு' விதித்த இந்தியா

இன்னும் 100 டாலர்களுக்கு மேல் தான் கச்சா எண்ணெய் வர்த்தகமாகி வருகிறது. இந்தியாவில் எண்ணெய் இறக்குமதிகள் தடைப்படாமல் இருக்க, அந்நிய செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை ... மேலும் பார்க்க

ஆந்திரா: "3வது, 4வது குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.30 ஆயிரம் சன்மானம்" - முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். தற்போது 3வது மற்றும் 4வது குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கும்... மேலும் பார்க்க