செய்திகள் :

தவெக அமைச்சரவையில் இடம்பெறும் திருமாவளவன்? திருச்சி கிழக்கில் இடைத் தேர்தலில் போட்டியா?

post image

த.வெ.க அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்புவிடுத்த நிலையில், வி.சி.க சார்பில் அதன் தலைவர் திருமாவளவனே அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார் என்கிறார்கள் விவரப்புள்ளிகள்.

திருமாவளவன்
திருமாவளவன்

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், வி.சி.க., ஐ.யூ.எம்.எல் என 121 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் த.வெ.க கூட்டணிக்குள் நுழைந்துவிட்ட நிலையில் மற்றவர்கள் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும் தி.மு.க கூட்டணியிலேயே தொடர்வதாகவும் அறிவித்தனர்.

ஆனால் 'த.வெ.க ஆட்சிக்கு ஆதரவு, தி.மு.க கூட்டணியில் நீடிக்கிறோம்' என திருமா அறிவித்ததை அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளே விரும்பவில்லை. எனவே தி.மு.க கூட்டணியா.. த.வெ.க கூட்டணியா.. என இரண்டில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிர்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், "த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க இடம்பெற வேண்டும் என்பதுதான் வி.சி.க உயர்நிலைக் குழுவின் விருப்பம். அதேபோல் தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேற வேண்டும் என்பதே 75% அக்கட்சியினர் வேண்டுகோள்.

கட்சியினர் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொண்ட திருமா, கடந்த மே 16-ம் தேதி ஆதவ் அர்ஜுனாவைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருமா - ஆதவ்

த.வெ.க தரப்பில், வரவிருக்கும் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நீங்களே போட்டியிடுங்கள். எனவே நேரடியாக நீங்களே அமைச்சரவையில் இடம்பெற்றுவிடலாம் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் விஜய்யும் இதையே விரும்புகிறார் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

கட்சியினரின் விருப்பம், த.வெ.க கோரிக்கைகளைப் பரிசீலித்த திருமாவளவன் கிட்டதட்ட சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால், வன்னி அரசுதான் அமைச்சராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருமாவே அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார் எனக் கசியும் தகவல்கள் தமிழ்நாடு அரசியலின் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. அவ்வாறு நடந்தால் அவரது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிவரும்" என்றனர்.

அமைச்சராகிறாரா திருமாவளவன்.. பொறுத்திருந்து பார்ப்போம்!

ஆந்திரா: `நீண்டகாலத் திட்டமிடல் இல்லாமல் வெறுமனே...' - விவாதத்துக்குள்ளாகும் அரசின் திட்டம்!

மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டபோது, தென் மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால், பெரும் சிக்கலுக்கு உள்ளாகின. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இந்த த... மேலும் பார்க்க

மதுரை : 'ஆதார் அட்டையைக் காண்பித்து மது வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள்' – காரணம் என்ன?

தமிழ்நாட்டில் கோயில்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும், மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கக் கூடாது, அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: ``தமிழ்நாடு அரசு, மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவா?" - அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்!

தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) மும்மொழிக் கொள்கை போன்ற அம்சங்களை முந்தைய தி.மு.க அரசு எதிர்த்ததால், மத்திய அரசு 'சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்திற்கான சுமார் ரூ. 3,500 கோடி கல்வி நிதியை நிறுத்தி... மேலும் பார்க்க

தொழில்துறைக்கு மட்டும் தானா, அப்போ முதலீட்டிற்கு? வெள்ளி இறக்குமதியில் 'கட்டுப்பாடு' விதித்த இந்தியா

இன்னும் 100 டாலர்களுக்கு மேல் தான் கச்சா எண்ணெய் வர்த்தகமாகி வருகிறது. இந்தியாவில் எண்ணெய் இறக்குமதிகள் தடைப்படாமல் இருக்க, அந்நிய செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை ... மேலும் பார்க்க

ஆந்திரா: "3வது, 4வது குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.30 ஆயிரம் சன்மானம்" - முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். தற்போது 3வது மற்றும் 4வது குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கும்... மேலும் பார்க்க

வித்யாஷ்ரம் பள்ளியில் நிர்வாக பிரச்னை; இடைக்கால நிர்வாகியாக விஜய்குமார் ரெட்டி - நீதிமன்றம் தீர்ப்பு

செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியை நடத்தி வரும் குமார ராஜா முத்தையா பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளியை நிர்வகிக்க புதிய நிர்வாகி ஒருவரை நியமித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். கடந்த மே 2-ம் தேதி, அந்தப... மேலும் பார்க்க