செய்திகள் :

பஞ்சாப்: திருமணத்திற்கு மறுத்த பாடகி; கால்வாயில் சடலமாக மீட்பு; வாலிபர் மீதான வழக்கின் பின்னணி என்ன?

post image

பஞ்சாப்பில் ஆயுத கலாசாரத்திற்குக் குறைவில்லாமல் இருக்கிறது. அடிக்கடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யும் சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன.

தற்போது பஞ்சாப்பில் பெண் பாடகி ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தர் கவுர் என்ற அப்பெண் பாடகி கடந்த 13ம் தேதி லூதியானாவில் உள்ள தனது வீட்டில் இருந்து மளிகை சாமான்கள் வாங்குவதற்காக இரவு 8 மணிக்குத் தனது காரில் புறப்பட்டு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து இது குறித்து போலீஸில் புகார் செய்தனர்.

குடும்பத்தினர் நடத்திய விசாரணையில் சுக்விந்தர் சிங் என்பவர்தான் இந்தர் கவுரைக் கடத்தி சென்று இருப்பது தெரிய வந்தது. இந்தர் கவுர் கொலை செய்யப்பட்டு அங்குள்ள கால்வாய் ஒன்றில் போடப்பட்டு இருந்தார்.

இந்தர் கவுர்
இந்தர் கவுர்

அவரது உடலை போலீஸார் மீட்டுள்ளனர். அவரது உடலை அவரது பெற்றோரும் அடையாளம் காட்டியுள்ளனர். இது குறித்து சுக்விந்தர் சிங் மற்றும் அவனது கூட்டாளி கரம்ஜித் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் போலீஸார் குற்றவாளியைப் பிடிக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து இந்தர் கவுர் சகோதரர் ஜோதிந்தர் சிங் கூறுகையில், ''சுக்விந்தர் எனது சகோதரியைத் திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அக்கோரிக்கையை எனது சகோதரி நிராகரித்துவிட்டார். எனவே சுக்விந்தர் சிங் எனது சகோதரியைக் கொலை செய்வதற்காக கனடாவில் இருந்து பஞ்சாப் வந்து துப்பாக்கி முனையில் எனது சகோதரியைக் கடத்தி சென்று கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு மீண்டும் கனடாவிற்குச் சென்றுவிட்டான்'' என்று குறிப்பிட்டார்.

திண்டுக்கல்: தனியார் மருந்தகத்தில் கொத்து கொத்தாக கைப்பற்றபட்ட போதை தரும் மாத்திரைகள்; வாலிபர் கைது!

தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் நகர் காவல்நிலைய டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ப... மேலும் பார்க்க

`திருமணம் செய்து வைப்பதாகக்கூறி வரவழைத்து கொன்றோம்' மகளின் கண்முன்னே காதலனை கொலை செய்த தந்தை

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகிலுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்தவர் சஞ்சய். சென்னையில் சிற்பக்கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் பக்கது ஊரான கெச்சிலாபுரத்தைச் சேர்ந்த உறவினர் கனகலெட்சுமியும் கா... மேலும் பார்க்க

தனியார் டிவி ரிப்போர்டரை வீடு புகுந்து தாக்கிய கும்பல்; கஞ்சா போதை காரணமா? திருவாரூர் போலீஸ் விசாரணை

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் ஹாஜா முகைதீன் (38), இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரிப்போர்டராக வேலை செய்கிறார். நேற்று கோவிலூர் பகுதியில் செய்தி சேகரிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை; பெண்ணின் தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்தவர் சஞ்சய். இவர், சென்னையில் சிலை செய்யும் சிற்பியாக வேலை பார்த்து வந்தார். மேலும், கூலித் தொழிலுக்கும் சென்று வந்துள்ளார். இவரும், பக்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஆண் குழந்தை இல்லாததால் மனைவி மீது சந்தேகம்; பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய கணவர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள உருளி கஞ்சன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இடத்தில் வசிப்பவர் சுக்காராம். வெல்டராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி திருமணம் மீறிய உறவில் இருப்பதாகச் சந்தேக... மேலும் பார்க்க

கெளதம் அதானி மீதான குற்ற வழக்குகள்; கைவிட்ட அமெரிக்க அரசு; தள்ளுபடி செய்த நீதிமன்றம்; காரணம் என்ன?

தொழிலதிபர் கெளதம் அதானி இந்தியாவில் சோலார் மின் திட்டங்களைப் பெற அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டியதாக அ... மேலும் பார்க்க