செய்திகள் :

திண்டுக்கல்: தனியார் மருந்தகத்தில் கொத்து கொத்தாக கைப்பற்றபட்ட போதை தரும் மாத்திரைகள்; வாலிபர் கைது!

post image

தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் நகர் காவல்நிலைய டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது போதையில் வாகன ஓட்டி வந்த இளைஞர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் போதை மாத்திரைகள் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது.

வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்தினால் மதுவை விட அதிகளவில் போதை கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த மாத்திரைகள் சந்துக்கடை அருகே சிட்டி மருந்தகம் வாங்கியதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து மருந்து ஆய்வாளர் மகேஸ்வரன் உதவியுடன் வடக்கு காவல்துறையினர் சிட்டி மருந்தகத்தை  நேற்று முன்தினம் சோதனை செய்தனர்

அப்போது அட்டவணைப்படுத்தப்பட்ட மாத்திரைகள் உரிய கொள்முதல் ரசீது மற்றும் ஆவணங்கள் இல்லாமல் வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து கடையை நிர்வாகித்து வந்த ஆரிப் அகமது கைது செய்யப்பட்டார். மேலும், அவரது தந்தையும் கடையும் உரிமையாளருமான அப்துல்லா பாட்ஷா தலைமுறைவாகியுள்ளார்.

ஆரிப் அகமது

மேலும் கடையிலிருந்து 17,737 ஆவணங்கள் இல்லாத மாத்திரைகளும், மருந்துகளை கலக்கும் 293 ஆய்வக குப்பிகள் மற்றும் 20 ஊசிகள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், முதற்கட்ட விசாரணையில் சிட்டி மருந்துகத்திற்கு கீழ்தளத்திற்கு  மருந்து வைப்பதற்கு அனுமதி பெற்று மேல் தளத்தில் அனுமதி இல்லாத இடத்தில் மருந்துகள் வைக்கப்பட்டு இருப்பதும், மருந்துகளுக்கு தேவையான கொள்முதல் ரசீதுகள் இல்லாததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் விசாரணை முடிந்து ஆரிப் அகமதுவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். திண்டுக்கல்லில் போதை தரக்கூடிய மாத்திரைகள் உரிய அனுமதி இல்லாமல் வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்: திருமணத்திற்கு மறுத்த பாடகி; கால்வாயில் சடலமாக மீட்பு; வாலிபர் மீதான வழக்கின் பின்னணி என்ன?

பஞ்சாப்பில் ஆயுத கலாசாரத்திற்குக் குறைவில்லாமல் இருக்கிறது. அடிக்கடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யும் சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. தற்போது பஞ்சாப்பில் பெண் பாடகி ஒருவர் துப்பாக்கி முனையில்... மேலும் பார்க்க

`திருமணம் செய்து வைப்பதாகக்கூறி வரவழைத்து கொன்றோம்' மகளின் கண்முன்னே காதலனை கொலை செய்த தந்தை

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகிலுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்தவர் சஞ்சய். சென்னையில் சிற்பக்கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் பக்கது ஊரான கெச்சிலாபுரத்தைச் சேர்ந்த உறவினர் கனகலெட்சுமியும் கா... மேலும் பார்க்க

தனியார் டிவி ரிப்போர்டரை வீடு புகுந்து தாக்கிய கும்பல்; கஞ்சா போதை காரணமா? திருவாரூர் போலீஸ் விசாரணை

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் ஹாஜா முகைதீன் (38), இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரிப்போர்டராக வேலை செய்கிறார். நேற்று கோவிலூர் பகுதியில் செய்தி சேகரிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை; பெண்ணின் தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்தவர் சஞ்சய். இவர், சென்னையில் சிலை செய்யும் சிற்பியாக வேலை பார்த்து வந்தார். மேலும், கூலித் தொழிலுக்கும் சென்று வந்துள்ளார். இவரும், பக்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஆண் குழந்தை இல்லாததால் மனைவி மீது சந்தேகம்; பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய கணவர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள உருளி கஞ்சன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இடத்தில் வசிப்பவர் சுக்காராம். வெல்டராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி திருமணம் மீறிய உறவில் இருப்பதாகச் சந்தேக... மேலும் பார்க்க

கெளதம் அதானி மீதான குற்ற வழக்குகள்; கைவிட்ட அமெரிக்க அரசு; தள்ளுபடி செய்த நீதிமன்றம்; காரணம் என்ன?

தொழிலதிபர் கெளதம் அதானி இந்தியாவில் சோலார் மின் திட்டங்களைப் பெற அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டியதாக அ... மேலும் பார்க்க