ஹரியானா: மைனர் பெண்ணுடன் காதல்; பேட்மிண்டன் வீரரைச் சித்ரவதை செய்து கொன்ற பெண்ணி...
"கோவை சிறுமி கொலை குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை" - அமைச்சர் சம்பத்குமார் உறுதி
கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்தினரை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “சிறுமி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அதிகாரிகளிடம் பேசினேன்.
துரிதமாகச் செயல்பட்டு காவல் துறையினர் குற்றவாளிகளைக் கைது செய்து இருக்கின்றனர். இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்படும். கைதான இரண்டு பேரும் நீதிமன்ற காவலுக்குக் கொண்டு சென்று இருக்கின்றனர்.
உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டிருக்கின்றேன். குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கித் தருவதில் அரசு உறுதியாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான நிவாரணம் வழங்கப்படும்.
இந்தச் சம்பவமே இறுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். குற்றம் செய்பவர்களுக்குப் பயம் இருக்க வேண்டும். இந்தக் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத்தருவது எங்களது கடமையாக இருக்கும்.

தமிழகம் முழுவதும் சிங்கப்பெண்கள் திட்டம் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. வரும் 27ஆம் தேதி திட்டம் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தபடும்.
ஆர்டிஓ மற்றும் காவல்துறை மூலம் விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறோம். சிறுமி குடும்பத்திற்கு நிதி உதவியை முதல்வர் விரைவில் அறிவிப்பார். எங்கள் அரசு எந்தச் சமரசமும் செய்து கொள்ளாது.
குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டனை கடுமையாக இருக்கும். குற்றம் நடைபெற்ற பகுதியில் கண்காணிப்பைப் பலப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்க கூடிய பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தபடும்” என்றார்.

















