செய்திகள் :

`பிராமணர் என்கிற காரணத்திற்காக அறநிலையத்துறை அமைச்சர் பதவியா?' - அமைச்சர் ரமேஷ் விளக்கம்

post image

தமிழக அமைச்சரவையில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ரமேஷ் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பலரும் இதை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்நிலையில், `பிராமணர் என்கிற காரணத்திற்காக அறநிலையத்துறை அமைச்சர் பதவியா?' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரமேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

அதற்கு பதிலளித்த அவர், " சாதிக்கு எதிராக போராடிய பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றவன் நான். சாதி பார்த்து யாருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி எதுவும் வழங்கப்படவில்லை.

மதச்சார்பின்மை தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை. எங்களுக்கு மதமோ, சாதியோ, இனமோ, பணமோ, மொழியோ, பாலினமோ எந்தவித பாகுபாடும் கிடையாது என்பதை உறுதியாக ஏற்றுக்கொண்டு தான் தவெகவில் சேர்ந்திருக்கிறோம்.

அதனால் எதைப் பார்த்தும் தலைவர் விஜய் வாய்ப்பு கொடுக்கவில்லை. சேவை செய்யக்கூடிய மனநிலை இருக்கிறதா? என்பதை பார்த்து தான் வாய்ப்பு வழங்கினார். சாதியை வைத்து பேச வேண்டிய அவசியம் இல்லை.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய எண்ணம் இருப்பதை மட்டும் பாருங்கள். மக்கள் ரமேஷ் என்ற எம்.எல்.ஏ-வுக்காக வாக்களிக்கவில்லை. அனைவரும் எங்கள் தலைவர் விஜய்க்காக தான் வாக்களித்தார்கள். திரையில் அவர் வரும்போது யாரும் சாதி, மதம் அடிப்படையில் பார்க்கவில்லை.

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்

அவர்களை தங்கள் வீட்டில் ஒருவராக தான் பார்த்தார்கள். விஜய் நிறுத்திய வேட்பாளர்களையும், அமைச்சர்களையும் அப்படித்தான் மக்கள் பார்க்கிறார்கள். அவருக்கு இதுபோன்று பிரிவினை பார்க்கக்கூடிய எண்ணம் துளியும் கிடையாது" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

Cockroach Janta Party: "என் குடும்பத்திற்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது" - அபிஜித் தீப்கே ஆதங்கம்!

வேலை இல்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் என்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கருத்து பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து `கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற நையாண்டித் தளத்தை இ... மேலும் பார்க்க

VCK : 'தலித் பாந்தர்' தொடங்கி தமிழக அமைச்சரவை முதல் முறை வரை.! - விசிக கடந்து வந்த பாதை!

தமிழக அமைச்சரவையில் முதல் முறையாக விசிக இடம்பெற்றிருக்கிறது. தவெக அரசின் சமூக நீதி அமைச்சராக வன்னிஅரசு பொறுப்பேற்றிருக்கிறார். அதிகாரப் பகிர்வு குறித்து நீண்டகாலமாக பேசி வந்த விசிக-விற்கு அமைச்சரவையில... மேலும் பார்க்க

கோவை: சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி: ``நெஞ்சை உலுக்கும் பேரதிர்ச்சியை.!"- செந்தில் பாலாஜி

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, நடப்புக் கல்வியாண்டில் 5ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்ற நிலையில், வெகுநேர... மேலும் பார்க்க

"கேரளா துபாயிலா இருக்கிறது?"கனிமவள லாரிகளை அனுமதிக்க கோரிய திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

நாகர்கோவில் எம்.எல்.ஏ. ஆஸ்டின் மற்றும் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து ஆஸ்டி... மேலும் பார்க்க

"ஏற்கனவே நிறைய அனுபவித்துவிட்டேன்" ராசியில்லை என ஒதுக்கிய 13-ம் நம்பர் காரை கேட்டு வாங்கிய அமைச்சர்!

எம் எ கேரள மாநில முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்ற பின்னர் அமைச்சர்களின் இலாகாக்கள் ஒதுக்கீடு, அவர்களுக்கான பங்களா மற்ரும் கார் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த சி.பி.எம் அமைச்சரவையில் வேளாண் த... மேலும் பார்க்க

’நிதித்துறை அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டது ஏன்?’ – செங்கோட்டையன் விளக்கம்

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதல்வர் புரட்சித் தளபதியை பொறுத்தவரை தமிழகம் வாழ வேண்டும் என்பதுதான் அவரது ந... மேலும் பார்க்க