செய்திகள் :

’நிதித்துறை அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டது ஏன்?’ – செங்கோட்டையன் விளக்கம்

post image

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை  அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதல்வர் புரட்சித் தளபதியை பொறுத்தவரை தமிழகம் வாழ வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல வேண்டும் என்பது அவரது எண்ணம். எல்லோரும்  எல்லாமும் பெற வேண்டும் என்பது அவரது நோக்கம். ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பது அவரது கனவு. மக்கள் எல்லோரும் எல்லா நலன்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டங்களை தொடர்ந்து அறிவித்துக் கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு அமைச்சரும்  தங்கள் துறையில் சிறந்த பணிகளை ஆற்றிட  வேண்டும் என்ற எண்ணத்தை முதல்வர் சொல்லி இருக்கின்றார்.

காய்கின்ற மரத்துக்கு கல்லடி விழும். ஆ. ராசா இன்றைக்கு அல்ல, என்றைக்குமே ஏதாவது ஒரு வார்த்தையை வீசிவிட்டு வருந்துவார். மக்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவருடைய எண்ணங்கள் தூய்மையாக இல்லை என்பதுதான் அந்த கருத்தின் அடிப்படையில் தெரிகிறது. இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க எங்களுக்கு நேரமில்லை. மக்களுக்கு இரவு பகலாக பணியாற்ற தயாராக இருக்கிறோம்” என்றார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

நிதித்துறையில் இருந்து வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பு மாற்றப்பட்டது குறித்த  கேள்விக்கு, “இந்த கேள்வியை நீங்கள் கேட்க கூடும் என தெரியும். மக்களோடு மக்களாக இருந்து பணிகளை ஆற்ற வேண்டும் என விரும்புகின்றேன். நிதித் துறையை பொறுத்தவரை என்னுடைய பணிகள் முழுமையாக சென்னையில் இருந்து ஆற்ற வேண்டிய சூழல் ஏற்படும். மக்கள் பணி என்பது வருவாய்த்துறை மூலமாக எல்லா நலத்திட்ட பணிகளையும் உருவாக்க முடியும் என்பதால் என்னுடைய நிலையில், முதல்வரிடம் வேண்டுகோள் வைத்தேன். அந்த வேண்டுகோள் அடிப்படையில் தான் வருவாய்த்துறை அமைச்சராக இன்று வந்திருக்கிறேன்” என பதிலளித்தார்.

நிதிச் சுமை அதிகமாக இருப்பதால் இந்த பொறுப்பு வேண்டாம் என சொன்னதாக கூறப்படுகின்றதே என்ற கேள்விக்கு, “நீங்கள்  சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. உங்களை மாதிரி தோன்றும் ஒவ்வொரு கருத்துக்கும் நான் பதில் சொல்ல முடியாது. என்னுடைய உள்ளத்தில் இருப்பதை அவரிடம் சொன்னேன். அவர் அதை மாற்றிக் கொடுத்திருக்கிறார்” என பதிலளித்தார்.

 பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டுமென பிரதமர் அறிவுறுத்தி இருப்பது குறித்த கேள்விக்கு, “பாரத பிரதமர் அளவிற்கெல்லாம் போகாதீர்கள். அவ்வளவு தூரத்துக்கு எல்லாம் போக வேண்டாம். குழந்தைகள், குடும்பத்தினரை அழைத்து கொண்டு காரில் போவதில்லையா? பஸ்ஸில் போவது இல்லையா? இதற்கெல்லாம் பதில் சொல்வது சரியாக இருக்காது. எங்கேயோ ஒரு முடிச்சை போட வேண்டும், சிக்கலை போட வேண்டும் என கருதுகிறீர்கள். அதற்கு சிக்கக்கூடியவன் செங்கோட்டை அல்ல” என்றார்.

’சமூகநீதி பேசும் ஆ.ராசா பெண்ணை பொருளாக, கூட்டணி கட்சிகளை அடிமைகளாக பார்க்கிறார்’ - காங்கிரஸ் சாடல்

காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்ணை இழிவுபடுத்தும் சொல் பேசும் வாய், பண்பாட்டைப் பேச தகுதியற்ற வாய் என்று தமிழின் மரபே சொல்லும். ஆ.ராசா அவர்கள் தொடர்ச்ச... மேலும் பார்க்க

'ரூ.20 லட்சம் வருமானம்; பெற்றோர் ஐஏஎஸ்... பிள்ளைகளுக்கு ஏன் இட ஒதுக்கீடு?' - உச்ச நீதிமன்றம் கேள்வி!

இந்தியாவின் இட ஒதுக்கீடுக் கொள்கையில் 'கிரீமிலேயர்' வரம்பை நிர்ணயிப்பது தொடர்பான மிக முக்கிய வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.கர்நாடக மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட சமூகமான... மேலும் பார்க்க

லால்குடியில் நழுவிய வெற்றி; அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு வாரியத் தலைவர் பதவி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக லால்குடி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அதிமுக வேட்பாளர் லீமா ரோஸிடம் வெற்றி வாய்ப்பை இ... மேலும் பார்க்க

'அதிகாரமின்றி நிதானம் இழக்கும் திமுக!' - ஓர் அலசல்!

தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் முழுமையாக முடிந்திருக்கிறது. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்கு பிறகு ஒரு கூட்டணி அமைச்சரவை அமைந்திருக்கிறது. காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள்... மேலும் பார்க்க

பக்ரீத்: 'நோ' பசு, கன்றுக்குட்டி, ஒட்டகம் வெட்டுதல் - டெல்லி அரசு ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

வருகிற 28-ம் தேதி, பக்ரீத் பண்டிகை வர உள்ளது. இதை முன்னிட்டு, டெல்லியில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி வளர்ச்சி அமைச்சர் கபில் மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். "பக்ரீத் ப... மேலும் பார்க்க

தென்காசி: கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர்? - மனமுடைந்து விஷமருந்திய விவசாயி; உறவினர்கள் குற்றச்சாட்டு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தளவாய் புறம் வேதக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். விவசாயியான இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்துள்ளது. இது தொடர்பா... மேலும் பார்க்க