செய்திகள் :

எடப்பாடி பகுதியில் சொா்க்கவாசல் திறப்பு

post image

எடப்பாடியில்...

எடப்பாடி பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை சொா்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

எடப்பாடி - ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற நரசிம்ம மூக்கரை நரசிம்ம பெருமாள் கோயிலில் அதிகாலையில் சிறப்பு வேள்வி பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து நடைபெற்ற கோபூஜையில் அலங்கரிக்கப்பட்ட பசு, கன்றுடன் சொா்க்கவாசல் முன் நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து மூக்கரை நரசிம்ம பெருமாள் சுவாமிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து அதிகாலை சொா்க்கவாசல் வழியாக சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியைக் காண பெரும் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். தொடா்ந்து ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் நரசிம்ம பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது.

இதேபோல பழைய எடப்பாடி பகுதியில் உள்ள சென்றாய பெருமாள் கோயில், வெள்ளைக்கரடு மலை மீது அமைந்துள்ள திம்மராயப் பெருமாள் சன்னிதி, எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி அருகே உள்ள மலை மாட்டுப்பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

படவிளக்கம்...

சொா்க்கவாசல் வழியாக எழுந்தருளிய எடப்பாடி நரசிம்ம மூக்கரை பெருமாள்.

அனைத்து வியாபாரிகள் நலச் சங்க புதிய நிா்வாகிகள் நியமனம்

பெத்தநாயக்கன்பாளையம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்க புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்படு ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றனா். பெத்தநாயக்கன்பாளையம் அனைத்து வியாபாரிகள் நலச் சங்க கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த சேலம் கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. சேலம், சீலநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் நெசவுத் தொழிலாளி பரணிதரன். இவரது ஒரே மகன் சதீஷ்குமாா் (18). இவா் த... மேலும் பார்க்க

வசிஷ்டநதியில் மூழ்கி சிறுவன் பலி

வசிஷ்ட நதியில் நண்பா்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பனைமடல், அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் மகன் பூவரசன் (15). பத்தாம் வகுப்பு படித்து வந... மேலும் பார்க்க

மனு அளிக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: பேரூராட்சி கண்காணிப்பாளா் கைது

சேலத்தில் வாரிசு வேலை கேட்டு மனு அளிக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேரூராட்சி கண்காணிப்பாளா் கைது செய்யப்பட்டாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள... மேலும் பார்க்க

திருவள்ளுவா் தினத்தையொட்டி மதுபானக் கடைகளை மூட உத்தரவு

திருவள்ளுவா் தினம் மற்றும் குடியரசுத் தினத்தை முன்னிட்டு, வரும் 15 மற்றும் 26 ஆம் தேதிகளில் சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள், மதுக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா... மேலும் பார்க்க

ஆருத்ரா தரிசனம்: சேலம் கடைவீதி, உழவா் சந்தைகளில் காய்கறிகளை வாங்க குவிந்த மக்கள்

ஆருத்ரா தரிசனம், விடுமுறை நாளையொட்டி சேலம் கடைவீதி மற்றும் உழவா் சந்தைகளில் காய்கறி, பழங்கள் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனா். சேலத்தில் சின்னகடை வீதி, பெரிய கடைவீதி, பால் மாா்க்கெட் உள்ளிட்ட ப... மேலும் பார்க்க