செய்திகள் :

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

post image

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. காலை இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகளுடனும், பின்னர் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்த ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமார், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து செயல்பட்டத்காலும், தவெக அரசிற்கு ஆதரவாக வாக்களித்ததாலும் அவரிடமிருந்து மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக சுமைதாங்கி ஏழுமலை புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகம் ’எம்.ஜி.ஆர் மாளிகை’

அதேபோல், இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரவி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது இடத்தில் லோகநாதன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட இரு மாவட்ட செயலாளர்களும் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

திருப்பத்தூர் மாவட்ட செயலாளராக இருந்து வந்த முன்னாள் அமைச்சரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.சி. வீரமணியிடமிருந்தும் மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக டாக்டர் பசுபதி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், மாவட்ட செயலாளர் பதவிக்கு மாற்றாக எஸ்.எம். சுகுமாருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியும், கே.சி. வீரமணிக்கு அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. எனினும், இந்த பொறுப்புகளை ஏற்க இருவரும் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமார் மற்றும் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. கே.சி. வீரமணி ஆகியோர் பங்கேற்கவில்லை. இதில் கே.சி. வீரமணி தற்போது அமெரிக்கா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செயலாளர் பதவி மாற்றத்தைத் தொடர்ந்து இருவரும் கூட்டத்தை புறக்கணித்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`விளம்பர மோகம்; பள்ளிக் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறல்' கீர்த்தனாவுக்கு சீமான் கண்டனம்

அமைச்சர் கீர்த்தனா விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளி மாணவிகளுடன் பேசிய அமைச்சர் கீர்த்தனா, ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பப் பள்ளி மாணவி தயங்கியதால், ஆசிர... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திமுக - காங்கிரஸார் தொடர் கருத்து மோதல்; கல் வீச்சு... போலீஸ் புகார் - என்ன நடக்கிறது?

தூத்துக்குடியில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையிலான அரசியல் மோதல், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி வெளியிட்டுள்ள வீடியோ, அரசியல் வ... மேலும் பார்க்க

கச்சா எண்ணெய்: 26 ஆண்டுகளில் இல்லாத விலை குறைப்பு; சவுதியின் இந்த முடிவு இந்தியாவுக்கு குட் நியூஸா?

சவுதி அரேபியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் ஆசிய நாடுகளுக்கு குட் நியூஸ். சவுதி அரேபியா தன்னுடைய சொந்த எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவில் (Saudi Aramco) இருந்து 'அரப் லைட்' (Arab Light) எனும... மேலும் பார்க்க

"மு.க.ஸ்டாலினுடன் எங்களது நட்பு தொடர்கிறது, ஆனால்..!"- விசிக தலைவர் திருமாவளவன் சொல்வதென்ன?

எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வருகிறார். விசிக விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று முன்தினம் (ஜூலை. 5) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவள... மேலும் பார்க்க

`ஆங்கிலம் தான் அறிவா? ஏன் இதுவரை Last Bench ஸ்டூடென்ட் முன்னேறியதே இல்லையா அமைச்சர் கீர்த்தனா?'

"இவங்க கிட்ட சிம்பிளா, 'What is your Father?'ங்கற தான் கேட்டோம். ஆனா, அதுக்குமே அவங்களால பதில் சொல்ல முடியல...'(ஃபர்ஸ்ட் பெஞ்சில் அமர்ந்திருக்கும் அந்த மாணவியிடம் 'What is your name?', 'What is your F... மேலும் பார்க்க