செய்திகள் :

கச்சா எண்ணெய்: 26 ஆண்டுகளில் இல்லாத விலை குறைப்பு; சவுதியின் இந்த முடிவு இந்தியாவுக்கு குட் நியூஸா?

post image

சவுதி அரேபியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் ஆசிய நாடுகளுக்கு குட் நியூஸ்.

சவுதி அரேபியா தன்னுடைய சொந்த எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவில் (Saudi Aramco) இருந்து 'அரப் லைட்' (Arab Light) எனும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்த எண்ணெயின் விலையை தான் ஆகஸ்ட் மாதம் பேரலுக்கு 11 டாலர் குறைக்க உள்ளது சவுதி அரேபியா. கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சவுதி அரேபியா எண்ணெயின் விலையை குறைத்துள்ளது.

சவுதி அரேபியா
சவுதி அரேபியா

இந்த விலை மற்ற மத்திய கிழக்கு நாடுகளுடன் ஒப்பிடும் போது, பேரலுக்கு 1.50 டாலர் தள்ளுபடி ஆகும்.

எதிர்பார்த்ததை விட...

ப்ளூம்பெர்க் அறிக்கையில், சவுதி அரேபியா கச்சா எண்ணெயின் விலையைப் பேரலுக்கு 8 டாலர்கள் குறைக்கும் என்று கூறியிருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை விட, தற்போது விலை குறைந்துள்ளது.

ஏன் இந்த விலை குறைப்பு?

ஈரான் போர் உச்சத்தில் இருந்தபோது ஒரு பேரல் பிரன்ட் (Brent) எண்ணெய் பேரலுக்கு 115 டாலரை தாண்டியெல்லாம் விற்பனை ஆனது.

ஆனால், இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 72 டாலராக குறைந்துள்ளது.

போரும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளன. இதனால், போட்டிகளை சமாளிக்க சவுதி அரேபியா விலை குறைப்பை செய்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

சமீபத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "இனிமேல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்காது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

நாம் இன்று பெட்ரோல் பங்குகளில் வாங்கும் எரிபொருளானது, கிட்டத்தட்ட 6 வாரங்கள் அல்லது 2 முதல் 3 மாதங்களுக்கு முன்பே சர்வதேச சந்தையிலிருந்து வாங்கப்பட்ட கச்சா எண்ணெயாகும்.

அன்றைய தேதியில் கச்சா எண்ணெயின் விலை, காப்பீட்டுத் தொகை, கப்பல் போக்குவரத்துச் செலவு ஆகியவை அதிகமாக இருந்தன.

அதன் பிறகுதான் சுத்திகரிப்புச் செலவு, மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசின் வாட் வரி மற்றும் டீலர்களுக்கான கமிஷன் ஆகியவை இதில் சேர்க்கப்படுகின்றன.

எனவே, சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் கீழ் சரிந்திருந்தாலும், இந்த மலிவான விலையிலான எண்ணெய் இந்தியாவிற்கு வந்து சேர இன்னும் சில வாரங்கள் ஆகும். அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இதனால், இந்த எண்ணெய் விலை ஆகஸ்ட்டில் அமலுக்கு வந்த உடன், அந்த எண்ணெய் இந்தியாவில் இறக்குமதி ஆகி, அதன் விநியோகம் நாட்டிற்குள் தொடங்கும் போது, பெட்ரோல், டீசல் விலை குறையலாம்.

`விளம்பர மோகம்; பள்ளிக் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறல்' கீர்த்தனாவுக்கு சீமான் கண்டனம்

அமைச்சர் கீர்த்தனா விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளி மாணவிகளுடன் பேசிய அமைச்சர் கீர்த்தனா, ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பப் பள்ளி மாணவி தயங்கியதால், ஆசிர... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திமுக - காங்கிரஸார் தொடர் கருத்து மோதல்; கல் வீச்சு... போலீஸ் புகார் - என்ன நடக்கிறது?

தூத்துக்குடியில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையிலான அரசியல் மோதல், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி வெளியிட்டுள்ள வீடியோ, அரசியல் வ... மேலும் பார்க்க

"மு.க.ஸ்டாலினுடன் எங்களது நட்பு தொடர்கிறது, ஆனால்..!"- விசிக தலைவர் திருமாவளவன் சொல்வதென்ன?

எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வருகிறார். விசிக விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று முன்தினம் (ஜூலை. 5) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவள... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. காலை இர... மேலும் பார்க்க

`ஆங்கிலம் தான் அறிவா? ஏன் இதுவரை Last Bench ஸ்டூடென்ட் முன்னேறியதே இல்லையா அமைச்சர் கீர்த்தனா?'

"இவங்க கிட்ட சிம்பிளா, 'What is your Father?'ங்கற தான் கேட்டோம். ஆனா, அதுக்குமே அவங்களால பதில் சொல்ல முடியல...'(ஃபர்ஸ்ட் பெஞ்சில் அமர்ந்திருக்கும் அந்த மாணவியிடம் 'What is your name?', 'What is your F... மேலும் பார்க்க