செய்திகள் :

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; மீட்புப் பணிகள் தீவிரம்; கேரளாவில் மீண்டும் சோகம்

post image

கேரள மாநிலத்தின் மலப்புறம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் 'ஆனக்கம்பொயில் - மேப்பாடி' சுரங்கப்பாதை திட்டப் பணிகள் தற்போது மேனகாட்சி பாலம் அருகே நடைபெற்று வருகின்றன.

மலப்புறம் மற்றும் வயநாடு இடையேயான போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்தச் சுரங்கப்பாதை திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி பகுதியில், பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இன்று காலை திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் பல தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவு ஏற்பட்ட உடனே, கல்பற்றாவில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவை இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சுரங்கப்பாதைத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்புகள் இருந்தன. மேலும், அப்பகுதியில் சில வீடுகளும், தங்கும் விடுதிகளும் (Homestays) அமைந்துள்ளன.

விபத்து நடந்தவுடன் உள்ளூர் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு, இடிபாடுகளில் சிக்கியிருந்த மூன்று பேரைப் பத்திரமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்துள்ள அமைச்சர் டி. சித்திக் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு, மேலும் யாராவது இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனரா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக, கடந்த 2024 ஜூலை மாதத்தில் வயநாட்டின் மேப்பாடி பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகளில் சூரல்மலா, முண்டக்கை போன்ற கிராமங்கள் முற்றிலும் அழிந்தன. 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அந்தப் பேரழிவின் வடு மாறுவதற்குள், தற்போது மீண்டும் அதே பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வயநாடு நிலச்சரிவு:‌ அவசரக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர்; மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணி தீவிரம்

கேரள மாநிலம் வயநாடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 265 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்தத் தொடர் மழை காரணமாக மேப்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: நெல் மூட்டைகள் சரிந்து பெண் பணியாளர் பலியான சோகம்; இழப்பீடு வழங்க கோரிக்கை

தஞ்சாவூர் அருகே உள்ள ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள... மேலும் பார்க்க

திருவள்ளூர் அமோனியா கசிவு: இறப்பு எண்ணிக்கை 18-ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ம் தேதி அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த வடமாநிலத் தொழி... மேலும் பார்க்க

லாரி மீது பஸ் மோதி விபத்து; தீப்பிடித்தில் 7 பேர் பலி; பஸ்ஸில் சிகரெட் ஏற்றிச்சென்றதுதான் காரணமா?

மும்பை-டெல்லி இடையே புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராவிட்டாலும் முடிக்கப்பட்ட இடங்களில் போக்குவரத்திற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்தச் சாலையில்... மேலும் பார்க்க

குரங்குகளுக்கு பழம் கொடுத்த புது மணப்பெண்; மலை உச்சியிலிருந்து உருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்... மேலும் பார்க்க

காவிரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி; வீடியோ மோகத்தால் நிகழ்ந்த துயரம்

காவிரி ஆற்றுக்கு சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், மாண்டியா மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காவிரி ஆறுகர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தைச் ச... மேலும் பார்க்க