செய்திகள் :

த.வெ.க. எம்.எல்.ஏ. பேரம் வழக்கு: முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு

post image

த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை தொடர்புகொண்டு ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் பணம் வழங்க முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், IPDS நிறுவனர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 8 மற்றும் 12 உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் (FIR), த.வெ.க. எம்.எல்.ஏ. ஒருவரை தொடர்புகொண்டு 35 கோடி ரூபாய் வரை வழங்கத் தயாராக இருப்பதாகவும், சபாநாயகர் மீதான தீர்மானத்தின் போது குறிப்பிட்ட வகையில் செயல்பட வேண்டும் என்றும் பேரம் பேசியதாக குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இதில் நரேஷ், கிருஷ்ணன் மற்றும் அசோக் குமார் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இருவருக்கும் எதிராக லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும், திங்கட்கிழமை நடைபெறவிருந்த விசாரணைக்கு இருவரும் ஆஜராகவில்லை.

அசோக்குமார், செந்தில் பாலாஜி

இந்த நிலையில், வழக்கில் தன்னை கைது செய்யும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி, முன்ஜாமீன் வழங்குமாறு கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அரசியல் உள்நோக்கத்துடன் தனது பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தரப்பில் வாதிடப்படலாம் என சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு, அடுத்தகட்ட விசாரணை மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.!

கரூர் வழக்கு: `உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம்!' - மனுவை திரும்ப பெற்ற திமுக

கரூர் கூட்ட நெரிசல் விபத்து வழக்கில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சாட்சிகளை திசைதிருப்பும் வகையில் பேசுவதாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உச்ச நீதிம... மேலும் பார்க்க

"மனமகிழ் மன்றங்களில் அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் ஆய்வு செய்யக் கூடாது" - உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு எப்.எல்.2 உரிமத்தாரர்கள் சங்கத் தலைவர் வீரபாண்டியன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்,"எங்களுடைய சங்க உறுப்பினர்கள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையிடமிருந்து சட்டப்பூர்வ... மேலும் பார்க்க

'காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை' - பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை உயர் நீதிமன்ற கிளையில் காவலர் குடும்பநல அறக்கட்டளை தலைவர் சத்யபிரியா என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் போலீசார் தினமும் அதிக நேரம் பணிபுரிவதால் அதிக பணிச்சுமை ஏற்படுகிறது... மேலும் பார்க்க

பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு எதிரான வழக்கில் மறு விசாரணையா? - உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்ன?

முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் குற்றவாளியாக உள்ள வழக்கில், மறு விசாரணை நடத்த வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி தொடர்ந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்... மேலும் பார்க்க

`கணவரை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவி ஜீவனாம்சம் கோர முடியாது' - கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கணவரை விட கணிசமாக அதிக ஊதியம் பெறும் மனைவி, அவரிடமிருந்து ஜீவனாம்சம் கோர முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பாக, அந்த மனைவிக்கு வேறு எந்தப் பொறுப்புகளோ அல்லது கடன்களோ... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவருக்கு `மரண தண்டனை'- 60 நாள்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு

புனே அருகில் உள்ள நஸ்ராபூர் என்ற இடத்தில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட சிறுமி விடுமுறைக்காக ​​தனது பாட்டி வீட்டிற்... மேலும் பார்க்க