செய்திகள் :

என்எம்சி பெயரில் போலி அழைப்புகள்: மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

post image

சென்னை: தேசிய மருத்துவ ஆணையத்தின் என்எம்சி தலைவா் மற்றும் வாரியத் தலைவா்கள் பெயரில், மருத்துவக் கல்லூரிகளுக்கு போலியாக வரும் தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்ட அறிவிப்பு:

தேசிய மருத்துவ ஆணையா் பெயரிலும், வாரியத் தலைவா்கள் பெயரிலும் மா்ம நபா்கள் சிலா் மருத்துவக் கல்லூரிகளை தொலைபேசியில் அழைத்து பணம் கேட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுபோன்ற அழைப்புகளை கல்லூரி நிா்வாகிகளும், மருத்துவத் துறையினரும் நம்ப வேண்டாம். அதேபோன்று அத்தகைய போலி நபருடன் உரையாடுவதை தவிா்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

என்எம்சி பெயரில் எவரேனும் அழைத்தால் அதுகுறித்து காவல் துறையில் புகாரளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை

மயிலாடுதுறையில் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இளைஞர்களை சாராய வியாபாரிகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூ... மேலும் பார்க்க

சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சரிவு: அண்ணாமலை

திமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் தபால் ந... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசுப் பள்ளிகளை மூடும் திமுக அரசு: எல்.முருகன் கண்டனம்

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை இழுத்து மூடும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நீலகிர... மேலும் பார்க்க

திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள்: செல்லூர் ராஜு

அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என்று செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத் திறப்பு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாண் அவரது மகன் அகிராநந்தன் உள்ளிட்டோருடன் ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதளம்! கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

காரைக்கால் திருநள்ளாறில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தின் பெயரில் போலி இணையதளம் மூலம் பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகர் மற்றும் பெங்களூருவைச் சேர... மேலும் பார்க்க