செய்திகள் :

``எம்.எல்.ஏ-க்களுக்கு சலுகை... தூய்மைப் பணியாளருக்கு ஏமாற்றமா?" - உழைப்போர் உரிமை இயக்கம் கேள்வி

post image

நகராட்சி நிர்வாகத் துறையைத் தன் வசம் வைத்துள்ள தமிழக முதலமைச்சர் உடனடியாக தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் உழைப்போர் உரிமை இயக்க மாநிலத் தலைவர் கு.பாரதி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``10 முதல் 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வெறும் ரூ19,000 ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது.

உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி
உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கவும், அவர்களின் உதவியாளருக்கு சம்பளம் வழங்கவும் நிதி ஒதுக்கும் அரசு, தூய்மைப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம்கூட வழங்க முடியாதா? எனவே, ஆட்சியர் நிர்ணயித்த தினக்கூலியான ரூ.832 வழங்க வேண்டும் அல்லது குறைந்தபட்ச ஊதியமாக ரூ.25,000 வழங்க வேண்டும்.

ஆபத்தான சூழலில் பணிபுரியும் ஏழைத் தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கையைப் புறக்கணிப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாது. ஊராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் தொழிலாளர்களின் சம்பளத்தில் பெரும் முறைகேடு நடக்கிறது.
தூய்மைப் பணியாளர்களைக் கொத்தடிமைகளாக, மனிதநேயமற்ற முறையில் நடத்தக் கூடாது.

அரசு ஊழியர்களுக்கு 3-வது பிரசவம் என்றாலும் ஊதியத்துடன் விடுப்பு வழங்குவதைப் போல, பெண் தூய்மைப் பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். 365 நாட்களும் விடுப்பின்றி உழைக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய வார விடுமுறையும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

தரமற்ற உணவுக்குப் பதிலாக உணவுப்படி வழங்கப்பட வேண்டும். பெண் தொழிலாளர்களின் அத்தியாவசியத் தேவைகளான கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகளைச் செப்டம்பர் 15-க்குள் செய்து தருவதாக மாநகராட்சி ஆணையர் உறுதியளித்திருக்கிறார்.

கு.பாரதி
கு.பாரதி

அதேநேரம், தேர்தல் வாக்குறுதிப்படி பணிநிரந்தரம் செய்யும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. போராட்டக் களத்தில் சீருடை அணியாத ஆண் காவல்துறையினரைக் கொண்டு பெண் தொழிலாளர்களை மிரட்டுவதையோ அல்லது அச்சுறுத்துவதையோ காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும். முதலமைச்சரைச் சந்தித்துத் மனு அளிக்கும் வரை தங்களின் நியாயமான அறப்போராட்டம் தொடரும்" என்றார்.

Udhayanidhi: ``தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்" - உதயநிதி

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றினார். அப்போது, ``கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நான் நான்கு முறை த... மேலும் பார்க்க

"ராசிமணலில் அணை கட்ட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உண்ணாவிரதம்" - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

"தமிழக அரசு விரைவில் ராசிமணலில் அணை கட்டத் தொடங்க வேண்டும்" என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.பி.ஆர்.பாண்டியன்கிருஷ்ணகிரி மாவட்ட... மேலும் பார்க்க

”சர்க்காரா? சர்க்கஸ் கம்பெனியா? எனக் கேட்கும் அளவுக்கு இந்த அரசின் பர்பாமன்ஸ் இருக்கு” - உதயநிதி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திமுக இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ''கடந்த சில மாதங்களாகவே தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடிக்கடி வரு... மேலும் பார்க்க

``ஸ்டாலின் அல்ல, கலைஞரே போட்டியிட்டாலும் நானே வென்றிருப்பேன்"- கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு பேச்சு

சென்னை பெரம்பூரில் நேற்று தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, ``சட்டமன்றத்தேர்தலில் எனக்கு பிரசாரத்துக்கு 5 ந... மேலும் பார்க்க

பாஜக-விலிருந்து விலகிய நடிகர் தேவன் தவெக-வில் இணைகிறாரா? விஜய்யைச் சந்திக்க காரணம் என்ன?

கேரளாவைச் சேர்ந்த பிரபல வில்லன் நடிகர் தேவன், தமிழில் ஏராளமான சினிமாக்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் சுமார் 30 சினிமாக்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் தேவன் அரசியலிலும் மிகுந்த ஆ... மேலும் பார்க்க

"வீடியோவில் இருப்பது நானல்ல; அவரின் ஆதரவாளர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க?" - கீர்த்தனா ஆதங்கம்

காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்தப் பெண் அமைச்சர் கீர்த்தனாதான் என்றும் பரப்பப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் கீர்த்தனா இதுதொடர்பாக விளக்கம் ஒன்றை தனது எக... மேலும் பார்க்க