செய்திகள் :

"ராசிமணலில் அணை கட்ட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உண்ணாவிரதம்" - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

post image

"தமிழக அரசு விரைவில் ராசிமணலில் அணை கட்டத் தொடங்க வேண்டும்" என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ராசிமணல் பகுதியை நேரில் பார்வையிட்ட பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "காவிரியின் குறுக்கே ராசி மணலில் அணை கட்ட அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

2024 ல் ராசிமணல் பகுதியைப் பார்வையிட்டு மைசூரில் ஒன்றாக அமர்ந்து பேசிய கர்நாடக-தமிழக விவசாயிகள் ராசிமணலில் தமிழகம் அணை கட்டிக்கொண்டால் கர்நாடகாவிற்குத் தேவையான குடிநீரை எடுத்துக் கொள்ளலாம்.

இடது கரை காவிரி ஆறு தமிழகத்திற்கும் வலது கரை கர்நாடகாவிற்குச் சொந்தமாகிக் கொள்ளும். எனவே தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வதற்கு எந்தத் தடையும் இருக்காது என முடிவெடுத்து அன்றைய முதலமைச்சர் சித்தராமையாவிடமும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி சென்னையில் நடந்த தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'மேகதாட்டு அணை கட்டினால் தமிழகத்திற்குத்தான் பயன் அளிக்கும்' எனக் கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது மட்டுமின்றி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ராசிமணல் பகுதியில் பி.ஆர்.பாண்டியன் குழுவினர்
ராசிமணல் பகுதியில் பி.ஆர்.பாண்டியன் குழுவினர்

மேகதாட்டில் அணை கட்டினால் கர்நாடக-தமிழக விவசாயிகள் அழிந்து போவார்கள். எனவே தமிழகம் ராசிமணலில் அணை கட்ட கர்நாடக அனுமதிக்க வேண்டுமென கர்நாடக விவசாயிகள் முடிவெடுத்த நிலையில் உண்மைக்குப் புறம்பாக தனது அரசியல் சுயலாபத்திற்காக மேகதாட்டில் அணை கட்ட சட்டவிரோதமாகச் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழகம், புதுச்சேரி, காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்புதல் இல்லாமல் விரிவான வரைவு திட்ட அறிக்கை செல்லாது என்பதைத் தெரிந்தும் கர்நாடகா சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுகிறது.

அதுபோல முல்லை பெரியாறுக்கு மாற்றாக தமிழக எல்லையோரம் புதிய அணை கட்டிக்கொள்ள கேரளா அனுமதிப்பதாகவும் அதற்கான செலவினைத் தொகையை கேரளா அரசு ஏற்கும் என மாநில முதலமைச்சர் சதீஷன் தெரிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் ஜல் சக்தி துறை செயலாளர் தலைமையிலான குழுவும், உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவும் இரு மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அணை வலுவாக இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை கொள்ளளவை 152 அடி உயர்த்திக்கொள்ளவும், பேபி அணையைச் சரிபடுத்திக் கொள்ளவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏற்க மறுத்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் சதீஷன் பேசுவதை அனுமதிக்க முடியாது.

ராசிமணலைப் பார்வையிட சென்ற எங்கள் வாகனங்களை வனத்துறையினர் அனுமதிக்க மறுத்துவிட்டார். இருசக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்டு வந்தோம். ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தலா 1000 ரூபாய் பெற்றுக்கொண்டு பார்வையிட அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது.

மேகதாட்டு அணை கட்டுமானத்தைத் தடுத்து நிறுத்திடவும், ராசிமணலில் அணைக்கட்ட வலியுறுத்தியும், ஒகேனக்கலில் பரிசல் இயக்குபவர்களை நலனுக்காகவும் விரைவில் ஒகேனக்கலில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம்" என்றார்.

”சர்க்காரா? சர்க்கஸ் கம்பெனியா? எனக் கேட்கும் அளவுக்கு இந்த அரசின் பர்பாமன்ஸ் இருக்கு” - உதயநிதி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திமுக இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ''கடந்த சில மாதங்களாகவே தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடிக்கடி வரு... மேலும் பார்க்க

``ஸ்டாலின் அல்ல, கலைஞரே போட்டியிட்டாலும் நானே வென்றிருப்பேன்"- கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு பேச்சு

சென்னை பெரம்பூரில் நேற்று தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, ``சட்டமன்றத்தேர்தலில் எனக்கு பிரசாரத்துக்கு 5 ந... மேலும் பார்க்க

பாஜக-விலிருந்து விலகிய நடிகர் தேவன் தவெக-வில் இணைகிறாரா? விஜய்யைச் சந்திக்க காரணம் என்ன?

கேரளாவைச் சேர்ந்த பிரபல வில்லன் நடிகர் தேவன், தமிழில் ஏராளமான சினிமாக்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் சுமார் 30 சினிமாக்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் தேவன் அரசியலிலும் மிகுந்த ஆ... மேலும் பார்க்க

"வீடியோவில் இருப்பது நானல்ல; அவரின் ஆதரவாளர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க?" - கீர்த்தனா ஆதங்கம்

காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்தப் பெண் அமைச்சர் கீர்த்தனாதான் என்றும் பரப்பப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் கீர்த்தனா இதுதொடர்பாக விளக்கம் ஒன்றை தனது எக... மேலும் பார்க்க

Canada Vs US: ``தாக்கப்படும் போதுதான் போர்; நாங்கள் தாக்கப்பட்டிருக்கிறோம்" - கனடப் பிரதமர் காட்டம்

அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடாவின் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட்... மேலும் பார்க்க

TVK: `இந்தியாக் கூட்டணியில் தவெக?' - அமைச்சர் நிர்மல் குமார் பதில் என்ன?

திருப்பூர் மாவட்டத்தில் பேருந்து வசதியின்றி சிரமப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்காகப் புதிய பேருந்து சேவையை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமை... மேலும் பார்க்க