செய்திகள் :

"எரிபொருள் போதுமான அளவு இருக்கிறது; அச்சம் வேண்டாம்" - இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்

post image

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாகக் கடந்த புதன் அன்று இந்தியா பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தாக்கியது.

இதில் தங்கள் நாட்டின் குடிமக்கள் இறந்ததாகப் பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந்தியா தீவிரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்ட எனக் கூறியது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு, ஷெல் தாக்குதல்கள், வான்வழி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர்

இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இதனால் இந்தியா முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு, மருத்துவம் தொடர்பான பணியாளர்கள் விடுப்பின்றி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம் (IOCL)
இந்தியன் ஆயில் நிறுவனம் (IOCL)

இதற்கிடையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனச் சில வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இதனைத் தெளிவுபடுத்தியுள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் (IOCL), "இந்தியா முழுவதும் எங்கள் எரிபொருள் பங்குகள் போதுமான அளவில் உள்ளன. எங்கள் விநியோக பாதைகள் முற்றிலும் சீராக இயங்கி வருகின்றன.

அச்சத்தின் அடிப்படையிலான பெருமளவு வாங்கும் செயல்கள் தேவையில்லை. எரிபொருளும் எல்பிஜியும் எங்கள் அனைத்து அவுட்லெட்டுகளிலும் எளிதில் கிடைக்கின்றன" என்று அறிவித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

வேலூர்: ஆபத்தைச் சுட்டிக்காட்டிய விகடன்... மின் கம்பத்தை விரைந்து சீரமைத்த அதிகாரிகள்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் பகுதியில் அமைந்துள்ளது, மேலரசம்பட்டு கிராமம். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மே 20 ஆம் தேதி இரவு பெய்த கனமழ... மேலும் பார்க்க

முழங்கிய 30 குண்டுகள், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட அணுசக்தி விஞ்ஞானியின் உடல்!

இந்திய அணுசக்தி துறையின் மிக மூத்த அறிவியலாளரான எம்.ஆர். ஸ்ரீனிவாசன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 20 - ம் தேதி விடியற்காலை ஊட்டியில் உயிரிழந்தார். 95 வயதில் காலமான எம்.ஆர். ஸ்ரீனிவ... மேலும் பார்க்க

``தவெக-வின் வேகம் பத்தாது... திமுக மீதான விமர்சனங்களில் நான் பின்வாங்கவில்லை” - காளியம்மாள் பேட்டி

நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் விலகிய காளியம்மாள், 'தி.மு.க பக்கம் செல்லப்போகிறார். இல்லை, இல்லை... தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறார்' என பல செய்திகள் றெக்கைக் கட்டின. நாகப்பட... மேலும் பார்க்க

வேலூர்: கனமழையில் சேதமடைந்து சாய்ந்த மின் கம்பம்; அச்சப்படும் பொதுமக்கள்.. கவனிப்பார்களா அதிகாரிகள்?

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் பகுதியில் அமைந்திருக்கிறது மேலரசம்பட்டு கிராமம். வேலூர் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக மேலரசம்பட்டு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருக்கும் மின்கம்... மேலும் பார்க்க

ஆத்தூர்: பராமரிப்பின்றி பாழாகும் சிறுவர் பூங்கா... அச்சப்படும் மக்கள்! - கவனிப்பார்களா அதிகாரிகள்?

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், காந்தி நகர் பகுதியில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இங்கு நேரத்தை செலவிடு... மேலும் பார்க்க

நிதி ஆயோக்: "வீராவேசமாக பேசியவர் டெல்லிக்கு பறக்கிறாராம்..."- ஸ்டாலினைச் சாடும் எடப்பாடி பழனிசாமி

நிதி ஆயோக் கூட்டம் 2015-ம் ஆண்டு முதல் பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்... மேலும் பார்க்க