செய்திகள் :

எரிவாயு பற்றாக்குறை: `கேஸ் இணைப்பை துண்டிப்போம்' என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி... உஷார்!

post image

ஈரான் போரால் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயுவிற்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வர்த்தக சிலிண்டர் பற்றாக்குறையால் உணவகங்கள் அதிக அளவில் மூடப்பட்டுள்ளது. இந்த எரிவாயு பற்றாக்குறையை பயன்படுத்தி ஒரு கும்பல் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு முன்பு இணைய தள குற்றங்களில் ஈடுபடுபவர்கள் போலீஸார், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் என்று மிரட்டி பணம் பறித்துக்கொண்டிருந்தனர்.

இப்போது சீசனுக்கு தக்கபடி தங்களது வழிகளையும் மாற்றிக்கொண்டுள்ளனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ``காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெண்ணிற்கு அவரது மொபைல் போனில் மெசேஜ் ஒன்று வந்தது. அதில்,"இன்று இரவு உங்கள் கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதோடு அதில் ஒரு நம்பர் கொடுக்கப்பட்டு அந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளும்படி அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அப்பெண் அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய நபர் உங்களது கேஸ் இணைப்பு நம்பர் பிளாக் செய்யப்பட்டுள்ளது. அதனை சரி செய்ய தாங்கள் அனுப்பும் பைலை திறந்து அதில் உள்ள தகவல்களை பூர்த்தி செய்யும்படி போனில் பேசிய நபர் தெரிவித்தார். ஆனால் அந்த பைலை அப்பெண்ணின் ஐபோனில் திறக்கவில்லை. இதையடுத்து அப்பெண் அந்த நபரை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்தார்.

உடனே அப்பெண்ணின் கணவரின் மொபைல் போனில் திறக்கக்கூடிய பைலை அனுப்பி வைத்தார். அதில் ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.7 அனுப்பும்படி கேட்டுக்கொண்டனர். அப்பெண்ணும் ரூ.7 அனுப்பி வைத்தார். ஆனால் ஏதோ தவறு நடந்துவிட்டதாகவும், எனவே வேறு ஒரு ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி ரூ.7 அனுப்பும்படிகேட்டுக்கொண்டனர். இதனால் சந்தேகம் அடைந்த அப்பெண் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் நிறுத்திக்கொண்டார்.

ஆனால் மறுநாள் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரு.26 லட்சமும், அவரது கணவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.45 ஆயிரமும் எடுக்கப்பட்டு இருப்பதாக மெசேஜ் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து போலீஸில் புகார் செய்துள்ளார். இதே போன்று மேற்கு புறநகர் பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது போனிற்கு வந்த கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற எச்சரிக்கையால் வந்த பைலை திறந்து அதில் உள்ள தகவல்களை பூர்த்தி செய்தபோது ரூ.20 லட்சத்தை இழந்துவிட்டார். மற்றொருவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு உங்கள் கேஸ் இணைப்புக்கான எரிபொருள் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கிறது என்றும், இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் கூறி அதனை சரி செய்ய தாங்கள் அனுப்பும் பைலை பூர்த்தி செய்யும்படி கூறினார்.

அந்த நபர் பூர்த்தி செய்தபோது அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் எடுக்கப்பட்டுவிட்டது. 73 வயது ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர், தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.12.25 லட்சத்தை போலி மகாநகர் கேஸ் நிறுவன லோகோவுடன் வந்த வாட்ஸ்அப் மெசேஜை நம்பி இழந்தார். இது போன்று மும்பை முழுவதும் உள்ள பகுதியில் பொதுமக்கள் ரூ.70 லட்சத்தை இழந்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கேஸ் ஏஜென்சியின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் உங்கள் வங்கிக் கணக்கு, OTP அல்லது டெபிட் கார்டு பற்றிய விவரங்களை தொலைபேசியில் கேட்க மாட்டார்கள். மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு இந்த முறைகள் அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

தகாத ஆசைக்கு இணங்கமறுத்த பணிப்பெண்; குத்திக் கொலைசெய்துவிட்டு ஆந்திராவிற்கு ஓடிய மும்பை டிவி நடிகர்!

மும்பை மீரா ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஆசிஷ் மேஸ்ரம். டிவி நடிகரான ஆசிஷ் வீட்டில் சுமன் காம்ப்ளே என்ற 37 வயது பெண் வீட்டு வேலை செய்து வந்தார். அவர் வீட்டில் வேலை செய்தபோது அடிக்கடி ஆசிஷ் பாலியல் த... மேலும் பார்க்க

பெங்களூரு: இஸ்லாமிய மாணவனை 'தீவிரவாதி' எனத் திட்டிய பேராசிரியர்; வீடியோவால் வெளிவந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில், வகுப்பு நேரத்தில் இஸ்லாமிய மாணவர் ஒருவரை பேராசிரியர் ஒருவர் ‘தீவிரவாதி’ என்று திட்டி, மத ரீதியான வெறுப்புக்கருத்துக்களை உமிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ... மேலும் பார்க்க

காதலனை கரம்பிடிக்க பாலில் விஷம் கலந்து தந்தையை கொன்ற மகள் - குடும்ப சண்டையில் காட்டிக்கொடுத்த கணவன்

காதலனை கைபிடிக்க, சொந்த தந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தந்தையின் வேலையில் சேர்ந்த மகள் 3 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திராப்பூர் என்ற இடத்தை சே... மேலும் பார்க்க

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் குற்றச்சாட்டு - போலீஸ் விசாரணை!

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், பேராசிரியர் ஞானவேல் பாபு என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், செல்... மேலும் பார்க்க

`பிள்ளைகளுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுத்துவிட்டு' - மனதை ரணமாக்கும் காஞ்சிபுரம் சம்பவம்!

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஷம்சியா (26). இவருக்கு ஆஷிபா (8), அப்தர் (5) என இரண்டு குழந்தைகள். ஷம்சியாவின் கணவர் ஆசிப் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கடன் தொல்லையால்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: "என் தங்கமே, என்னை விட்டு போய்ட்டியே" - ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகேயுள்ள திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரின் 13 வயது மகன் பார்த்திபன், பெல் ராமகிருஷ்ணா பள்ளியில் ஏழாம் வகுப்புப் படித்து வந்தான். திரு.வி.க நகர் ஒன்றாவது தெர... மேலும் பார்க்க