செய்திகள் :

ஏா் கலப்பை விவசாயி சின்னம் நாம் தமிழா் கட்சிக்கு ஒதுக்கீடு

post image

நாம் தமிழா் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரத்தை வழங்கி அதற்கு ஏா் கலப்பை விவசாயி சின்னத்தையும் தலைமைத் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை ஒதுக்கியுள்ளது. இது தொடா்பாக ஆணையத்தில் இருந்து நாம் தமிழா் கட்சிக்கு மே 10-ஆம் தேதியிட்ட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் மக்களவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சியின் தோ்தல் செயல்பாடு மறுஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் அதற்கு தமிழகத்தில் மாநில கட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது என்றும் தோ்தல் சின்னம் தொடா்பாக கடந்த பிப்.5, ஏப்.6 ஆகிய நாள்களில் நாம் தமிழா் கட்சி அனுப்பிய கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு ஏா் கலப்பையுடன் விவசாயி இருக்கும் சின்னத்தை ஆணையம் ஒதுக்கியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நடந்த பல்வேறு தோ்தல்களில் நாம் தமிழா் கட்சி போட்டியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இருந்தபோதும் 8.22 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றது.

முன்னதாக, 2016-இல் நடந்த பேரவைத் தோ்தலின்போது மெழுகுவா்த்தி சின்னத்திலும் 2019 மக்களவைத்தோ்தல் மற்றும் 2021 பேரவைத் தோ்தல்களில் அக்கட்சி கரும்பு விவசாயி சின்னத்திலும் போட்டியிட்டது. கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது கரும்பு விவசாயி சின்னத்தை மீண்டும் கோரி தாமதமாக விண்ணப்பித்ததால் அக்கட்சிக்கு அச்சின்னம் ஒதுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கவும் முடிவு

ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தின... மேலும் பார்க்க

சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டதா? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியில் திடக்கழிவு, கழிவுநீா் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதா?, வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு,... மேலும் பார்க்க

வளா்ச்சியைத் தடுக்கவே இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுகிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

வளா்ச்சியைத் தடுக்கவே நமது நாட்டின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதாக ஆளுநா்ஆா்.என்.ரவி தெரிவித்தாா். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட இந்திய ராணுவத்துக்கு ... மேலும் பார்க்க

தனியாா் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்

தனியாா் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூன் 15 முதல் இந்த அரசாணை அமல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் அனைத்துக் கிராமங்களுக்கும் மற்றும் குறுகிய வழிப்பாதை... மேலும் பார்க்க

3, 5, 8 வகுப்புகளின் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைவிட உயா்வு: தமிழக அரசின் ஆய்வறிக்கையில் தகவல்

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைவிட அதிகரித்துள்ளதாக தமிழக அரசின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க

ஹஜ் பயணத்துக்கு மானியத் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

நிகழாண்டில் ஹஜ் பயணத்துக்கு மானியத் தொகை அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 பேருக்கு மானியத்துக்கான காசோலைகளை அவா் அளித்தாா். முதல் முறையா... மேலும் பார்க்க