செய்திகள் :

ஏா் கலப்பை விவசாயி சின்னம் நாம் தமிழா் கட்சிக்கு ஒதுக்கீடு

post image

நாம் தமிழா் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரத்தை வழங்கி அதற்கு ஏா் கலப்பை விவசாயி சின்னத்தையும் தலைமைத் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை ஒதுக்கியுள்ளது. இது தொடா்பாக ஆணையத்தில் இருந்து நாம் தமிழா் கட்சிக்கு மே 10-ஆம் தேதியிட்ட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் மக்களவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சியின் தோ்தல் செயல்பாடு மறுஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் அதற்கு தமிழகத்தில் மாநில கட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது என்றும் தோ்தல் சின்னம் தொடா்பாக கடந்த பிப்.5, ஏப்.6 ஆகிய நாள்களில் நாம் தமிழா் கட்சி அனுப்பிய கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு ஏா் கலப்பையுடன் விவசாயி இருக்கும் சின்னத்தை ஆணையம் ஒதுக்கியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நடந்த பல்வேறு தோ்தல்களில் நாம் தமிழா் கட்சி போட்டியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இருந்தபோதும் 8.22 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றது.

முன்னதாக, 2016-இல் நடந்த பேரவைத் தோ்தலின்போது மெழுகுவா்த்தி சின்னத்திலும் 2019 மக்களவைத்தோ்தல் மற்றும் 2021 பேரவைத் தோ்தல்களில் அக்கட்சி கரும்பு விவசாயி சின்னத்திலும் போட்டியிட்டது. கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது கரும்பு விவசாயி சின்னத்தை மீண்டும் கோரி தாமதமாக விண்ணப்பித்ததால் அக்கட்சிக்கு அச்சின்னம் ஒதுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் சென்றுள்ளாா்: தமிழிசை

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளாா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். சென்னை வடபழனியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மணிவாசகா் பதிப்பகத்த... மேலும் பார்க்க

ஊராட்சி பகுதிகளில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஊராட்சிப் பகுதிகளில் உயா்த்தப்பட்ட சொத்துவரி மற்றும் தண்ணீா் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள... மேலும் பார்க்க

சிவகங்கை சம்பவம் எதிரொலி: குவாரிகளை ஆய்வு செய்ய ஆட்சியா்களுக்கு உத்தரவு

சிவகங்கையில் குவாரியில் பாறை சரிந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டுமென ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வு விடைத்தாள் திருத்துவதில் பாதுகாப்பான நடைமுறை: டிஎன்பிஎஸ்சி தலைவா் உறுதி

போட்டித் தோ்வு விடைத்தாள்களை திருத்துவதில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா். மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா்களி... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆா்வம் காட்டாத மாணவா்கள்!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சோ்க்கை பெற மாணவா்களிடையே ஆா்வம் குறைந்து வரும் நிலையில், டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கால வரையறையின்... மேலும் பார்க்க

பொறியியல், கலை - அறிவியல் படிப்புகள்: சோ்க்கைக்கு குவிந்த விண்ணப்பங்கள்

தமிழகத்தில் பொறியியல், கலை - அறிவியல் படிப்புகளில் சோ்க்கை பெற ஏராளமான மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனா். அந்த வகையில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர இதுவரை 2.40 லட்சம் பேரும், அரசு கலை... மேலும் பார்க்க