செய்திகள் :

ஐஎம்டியின் 150-ஆவது ஆண்டுவிழா: வங்கதேசம் புறக்கணிப்பு

post image

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) 150-ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என வங்கதேச வானிலை ஆய்வு மையம் (பிஎம்டி) தெரிவித்துள்ளது.

அரசு செலவில் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிா்க்கும் நோக்கில் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என பிஎம்டி அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாணவா்கள் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடியை தொடா்ந்து வங்கதேச பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளாா். அவரை ஒப்படைக்குமாறு முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு, இந்தியாவிடம் கோரிக்கை வைத்து வரும் நிலையில் ஐஎம்டி நிகழச்சியை அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் புறக்கணித்துள்ளது.

இதுகுறித்து வங்கதேச செய்தியாளா்களிடம் பிஎம்டி செயல் தலைவா் மொமினுல் இஸ்லாம் கூறியதாவது: ஐஎம்டியின் 150-ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க அந்த அமைப்பு சாா்பில் ஒரு மாதம் முன்பே எங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. அவா்களுடன் நல்லுறவை தொடா்கிறோம். ஒருங்கிணைந்து செயல்பட விரும்புகிறோம்.

கடந்தாண்டு டிசம்பா் மாதத்தில் ஐஎம்டி அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றேன். இருப்பினும், தேவையற்ற வெளிநாட்டு பயணங்களுக்கு அரசு ஒதுக்கும் நிதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிா்க்கிறோம் என்றாா்.

கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் உள்ள எல்லையொட்டிய அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மியான்மா், பூடான், நேபாளம், இலங்கை மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஐஎம்டி அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடா்பாக ஐஎம்டியின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஐஎம்டி தொடங்கப்பட்ட காலத்தில் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆனால் வங்கதேசம் எந்த பதிலும் கூறவில்லை.

கடந்த 1864, 1866, 1871 ஆகிய ஆண்டுகளில் கொல்காத்தாவில் பருவமழை மற்றும் புயலால் பெருஞ்சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, 1875-ஆம் ஆண்டு கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு ஐஎம்டி தொடங்கப்பட்டது. அதன்பிறகு 1905-இல் சிம்லா, 1928-இல் புணேவுக்கு தலைமையகம் மாற்றப்பட்டது. இறுதியாக 1944-இல் தில்லிக்கு மாற்றப்பட்ட தலைமையகம் தற்போது வரை அங்கு செயல்பட்டு வருகிறது.

ஜனவரி 15, 2025-இல் ஐஎம்டி 150 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

ஆபத்தான அதிகாரக் குவிப்பு.. பிரியாவிடை உரையில் அமெரிக்கர்களை எச்சரித்த ஜோ பைடன்

அமெரிக்காவில் உள்ள ஒரு சில பணக்காரர்களிடையே, ஆபத்தான அதிகாரக் குவிப்பு நிலை உருவாகி வருவதாக அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், அதிபர் பதவியிலிருந்து விலகும் ஜோ பைடன்.அதிபர் பதவியிலிருந்து இன... மேலும் பார்க்க

இரு தனியார் நிலவு ஆய்வு கலங்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்-எக்ஸ்

கேப் கனாவெரல்: நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக இரு தனியார் விண்கலங்களை அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் புதன்கிழமை விண்ணில் செலுத்தியது.... மேலும் பார்க்க

அவசரநிலை விவகாரம்: தென் கொரிய முன்னாள் அதிபர் கைது

சியோல்: அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.அவரைக் கைது செய்யவிடாமல் அவரின் பாதுகாவல்... மேலும் பார்க்க

வங்கதேச அரசியல் சாசனத்திலிருந்து 'மதச்சார்பின்மை' நீக்கம்

டாக்கா: வங்கதேச அரசமைப்புச் சட்டத்திலிருந்து 'மதச்சார்பின்மை', 'சோஷலிசம்' ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சீர்திருத்தக் குழு பரிந்துத்துள்ளது.இது குறித்து அரசியல் சா... மேலும் பார்க்க

காஸா போா் நிறுத்தம்: வரைவு ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்

ஜெருசலேம்: காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினா் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, கத்தாரில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் இஸ்ரேலுக்கும... மேலும் பார்க்க

ஜனவரியை தமிழ் மொழி, பாரம்பரிய மாதமாக அறிவிக்க தீா்மானம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம்

வாஷிங்டன்: ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்கக் கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்... மேலும் பார்க்க