செய்திகள் :

ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்திக்கொள்ள இங்கிலாந்து அழைப்பு

post image

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், எஞ்சிய போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்திக் கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் நடந்து வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையறையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான 18வது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் இறுதிப் போட்டி மே 25ஆம் தேதி நடைபெறவிருந்தது.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தினால் போட்டிகளை காலவரையறையின்றி நிறுத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

இந்தியாவில் போர்ப் பதற்றம் இருக்கும்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது நல்லதல்ல என பிசிசிஐ அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கூறியிருந்தார்.

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் தொடருமா அல்லது இந்தியாவிலேயே நடைபெறுமா என்று கேள்வி எழுந்திருந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த அழைப்பை மேற்கொண்டுள்ளது. அழைப்பு ஏற்கப்படுமா? என்பது குறித்து விரைவில் தெரிய வரலாம்.

பெங்களூரு, ஹைதராபாத் அணி கேப்டன்களுக்கு அபராதம்!

மெதுவாகப் பந்துவீசியதாகக் கூறி பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளின் கேப்டன்கள் ரஜத் படிதார் மற்றும் பாட் கம்மின்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.... மேலும் பார்க்க

இஷான் கிஷன் அதிரடி: ஆர்சிபிக்கு 232 ரன்கள் இலக்கு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில்... மேலும் பார்க்க

ஆர்சிபி பந்துவீச்சு; முதல் முறையாக அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்கள... மேலும் பார்க்க

பிளே ஆஃப் சுற்றுக்காக ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைகிறாரா ஜோஸ் ஹேசில்வுட்?

பிளே ஆஃப் சுற்றுக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுத... மேலும் பார்க்க

சதம் விளாசிய மிட்செல் மார்ஷ்; குஜராத் டைட்டன்ஸுக்கு 236 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 2 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் ... மேலும் பார்க்க

லக்னௌவுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரில் லக்னௌவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இன்றையைப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னௌ... மேலும் பார்க்க