செய்திகள் :

ஐபிஎல் மே மாதத்திலேயே நடத்தப்பட்டால்... எங்கு நடத்தப்படும் தெரியுமா?

post image

ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் மே மாதத்திலேயே நடத்தப்பட்டால், இந்தியாவின் மூன்று முக்கிய நகரங்களில் நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றமான சூழல் குறைந்த பிறகே மீதமுள்ள போட்டிகள் நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தயவு செய்து ஓய்வு பெறாதீர்கள்; விராட் கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 57 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் இடையேயான 58-வது போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இன்னும் 16 போட்டிகளே மீதமிருக்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக ஒரு வாரத்துக்கு ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு வீரர்களும் தங்களது நாடுகளுக்கு செல்வதற்கு தயாராகி வருகின்றனர்.

மே மாதத்திலேயே நடத்தப்பட்டால்...

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழல் நீடிக்கும் பட்சத்தில், ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை செப்டம்பரில் நடத்துவதே சரியான தெரிவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மே மாதத்துக்குள் மீதமுள்ள போட்டிகளை நடத்தி முடிக்க பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடைபெறும்?

இந்திய அரசாங்கம் அனுமதி அளித்தால் இந்த மூன்று நகரங்களில் மீதமுள்ள போட்டிகள் நடத்தி முடிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், வெளிநாட்டு வீரர்கள் பலரும் தங்களது தாயகம் திரும்பி வருகின்றனர். அவர்களை மீண்டும் போட்டிக்காக ஒருங்கிணைக்கும் பணிகளும் இருக்கின்றன.

தற்போதுள்ள பதற்றமான சூழலில் ஐபிஎல் போட்டிகள் உடனடியாக தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பது போன்று தெரியவில்லை. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் முழுமையாக குறைந்து இயல்பு நிலை திரும்பிய பிறகே மீதமுள்ள போட்டிகள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

சதம் விளாசிய மிட்செல் மார்ஷ்; குஜராத் டைட்டன்ஸுக்கு 236 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 2 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் ... மேலும் பார்க்க

லக்னௌவுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரில் லக்னௌவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இன்றையைப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னௌ... மேலும் பார்க்க

தொடக்கம் சரியாக அமைந்தது, தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையவில்லை: ஹேமங் பதானி

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையவில்லை என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தில்லி கேபிடல்ஸ் மற... மேலும் பார்க்க

ஜேக்கோப் பெத்தேலுக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!

இங்கிலாந்து வீரர் ஜேக்கோப் பெத்தேலுக்கு பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மாற்று வீரரை அறிவித்துள்ளது.தேசிய அணிக்காக விளையாடவுள்ள காரணத்தினால் ஜேக்கோப் பெத்தேல் தாயகம் திரும்பவுள்ளார். அவர் நாளை ம... மேலும் பார்க்க

பிளே ஆஃபில் மும்பை; வெளியேறியது டெல்லி

ஐபிஎல் போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ûஸ புதன்கிழமை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக மும்பை, கடைசி அணியாக பிளே ஆஃபில் நுழைந்தது. டெல்லி ... மேலும் பார்க்க

இளம் அதிரடி வீரர்களுக்கு எம்.எஸ்.தோனி வழங்கிய அறிவுரை!

ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி அழுத்ததிற்கு உள்ளாகாமல் எப்போதும்போல விளையாடுங்கள் எனக் கூறியுள்ளார். இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே, உர... மேலும் பார்க்க