செய்திகள் :

‘ஒன்றிய அரசை எதிர்க்க தைரியம் இருக்கிறதா?’ - விஜய் அரசுக்கு அப்பாவு கேள்வி!

post image

தவெக அரசு மத்திய அரசின் சில திட்டங்களை எதிர்க்கவில்லை என்றும், கேள்வி கேட்கவில்லை என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு.

அந்தப் பதிவு...

2021-2026-ல் திமுக ஆட்சியில்

இருந்தபோது ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறை மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் நிதியைக் குறைப்பதற்கும் பெயரை மாற்றுவதற்கும் எதிரான தீர்மானங்கள் மற்றும் மசோதாக்கள் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, ஒன்றிய பாஜக அரசை நேரடியாக எதிர்த்து மக்கள் பக்கம் நின்று வெற்றியைத் தந்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் ஒன்றிய பாஜக அரசு கனிமம் எடுக்க முயற்சித்தபோது, “நான் முதல்வர் பதவியை இழந்தாலும்” அரிட்டாபட்டியில் கனிமங்கள் எடுக்க ஒன்றிய பாஜக அரசை அனுமதிக்க மாட்டேன் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து, தமிழக மக்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் முகஸ்டாலின்.

தற்போது மாநிலப் பட்டியலில் உள்ள சிறு கனிமங்கள் துறை நாடாளுமன்ற மசோதா மூலம் ஒன்றிய பாஜக அரசு கட்டுப்பாட்டிற்குக் கொண்டுசென்றதைக் கண்டித்துத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமோ, மசோதாவோ கொண்டுவருவதற்குத் தைரியம் இருக்கிறதா சி.எம் சார்?

ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையைத் தமிழகம் ஏற்றுக்கொள்ளாததால்,

ரூபாய் 5000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரத் துணிவிருக்கிறதா சி.எம் சார்?

பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் துணை வேந்தர்கள் நியமனம் மாநில அரசின் உரிமை என்று சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்து ஆளுநர் ஒப்புதல் பெற ஆண்மை இருக்கிறதா சி.எம் சார்?

திமுக ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குச் சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்து ஆளுநர் ஒப்புதல் பெற்றுச் சட்டப்படி தடை செய்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்று ஆன்லைன் லாட்டரி விற்பனைத் தடைச் சட்டம் கொண்டுவர இயலாத சுயநலவாதியாக இருக்கிறீர்களா சி.எம் சார்?"

"தலித் மக்களுக்கான சட்டபூர்வ உரிமைகளை தவெக அரசு செயல்படுத்த வேண்டும்!" - திருமாவளவன் வலியுறுத்தல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பெரம்பலூர், ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையி... மேலும் பார்க்க

`மு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை' - நீதிமன்ற உத்தரவின் பின்னணி என்ன?

மதுரை கீழவளவு காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட சுமார் 256.44 கோடி மதிப்பிலான சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைத் தடைச் சட்ட (PMLA) வழக்கில்... மேலும் பார்க்க

நேபாள வெள்ளம்: உடல்களை அடக்கம் செய்கிறார்கள்; ஆனால் DNA-வை ஏன் சேமிக்கிறார்கள்?

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் மீட்புப் பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இதுவரை கிட்டத்தட்ட 675 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 3,000-க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை... மேலும் பார்க்க

"அமைச்சர் ரமேஷின் விசுவாசத்துக்கான ஆட்டம் எல்லை தாண்டிய பயங்கரவாதம்!"- தோழர் கே.சுப்பராயன் காட்டம்

த.வெ.க அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்துவருகின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் பற்றிய விவரங்களை சேகரிக்குமாறு குஜிலியம்பாறை தாசில்தார் உத்தரவிட்டிருந்ததும், தமிழக உயர் கல்வ... மேலும் பார்க்க

'முதலமைச்சரின் ஆட்களே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர்'- காங்கிரஸ் அரசை விமர்சித்த பினராயி

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், பையன்னூரில் சி.பி.எம் சார்பில் தற்போதையை அரசியல் நிலையை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கலந்துகொண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `கார் கொடுத்தீங்க, டிரைவர்?'- `ஹெல்மெட்’ அணியாமல் வந்த ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு அபராதம்

புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி முத்தியால்பேட்டை தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டனுக்கு கார் வழங்கப்பட்டிருக்கும் நிலையி... மேலும் பார்க்க