செய்திகள் :

நேபாள பெருவெள்ளத்தில் உயிர் தப்பிய 97 வயது மூதாட்டி - மீட்புப் பணியின் நம்பிக்கை முகமான குணா மாயா!

post image

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குணா மாயா போஹாரா தங்கியிருந்த முதியோர் பராமரிப்பு இல்லம் இடிந்து விழுந்தது. 97 வயதான குணா மாயா அந்த இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். அவரை மீட்க நேபாள போலீஸாரும் ராணுவத்தினரும் களமிறங்கினர்.

வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பால் அந்தப் பகுதியே சேதமடைந்திருந்தது. சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குணா மாயாவை மீட்பது சவாலாக இருந்தது. இதற்கிடையே, காத்மாண்டுவிலிருந்து அவரது உறவினர் தீபக் போஹாராவும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் இணைந்தார்.

குணா மாயா

இடிபாடுகளுக்குள் தொடர்ந்து தேடிய நிலையில், குணா மாயா இன்னும் உயிருடன் இருப்பது தெரியவந்தது. சுமார் நான்கு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். மண் படிந்த ஆடைகளுடன் எக்ஸ்கவேட்டரின் வாளியில் அமர்ந்தபடி அவர் வெளியே கொண்டுவரப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.

சேற்றில் தோய்ந்த உடையுடன், சோர்ந்த முகத்துடன் அவர் அமர்ந்திருந்த காட்சி பலரையும் நெகிழச் செய்தது. அந்தத் தருணத்தைப் பார்த்த தீபக் போஹாரா, “போரில் வெற்றி பெற்று திரும்பிய ஒரு வீரரைப் போல இருந்தார்” என்று கூறியுள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குணா மாயாவால், இடிபாடுகளுக்குள் எப்படி உயிருடன் இருந்தார் என்பதை விளக்க முடியவில்லை.

இந்த வெள்ளம் நேபாளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 676 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 3,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல குடும்பங்கள் தங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், குணா மாயாவின் மீட்பு ஒரு சிறிய நம்பிக்கையைத் தருகிறது. வெள்ளத்தின் அழிவுக்கு நடுவே, நான்கு மணி நேரத் தேடலுக்குப் பிறகு கிடைத்த அந்த ஓர் உயிர், மீட்புப் பணியில் நம்பிக்கையைத் தொடர்ந்து வைத்திருக்கிறது.

ஆட்டிசம்: `கையேந்த விரும்பல; உழைத்து வாழ வாய்ப்பு கெடச்சா போதும்'- பொம்மை வியாபாரம் செய்யும் குமார்!

சென்னை, தாம்பரத்தில் சாலையோரக் கோயில் ஒன்றின் முன்பு, "இங்கு வாகனங்களை நிறுத்தக் கூடாது" என்று எழுதப்பட்டிருந்த ஒரு சிறிய இடம். அந்த இடத்தில் விரிக்கப்பட்டிருந்த ஒரு ஷீட்டின் மீது சில பொம்மைகள் அடுக்க... மேலும் பார்க்க

மதுரை: விபத்தில் உயிரிழந்த காவலர்; குடும்பத்துக்காக ஒன்றிணைந்து ரூ.22 லட்சம் திரட்டிய சக காவலர்கள்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். தமிழக காவல்துறையில் சென்னையில் பணிபுரிந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அங்கு நடந்த விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். மிக இளம் வயதில் அத... மேலும் பார்க்க

'40 ஆண்டுகளில் ரூ. 1.65 கோடி' - யாசகம் பெற்ற பணத்தை மக்களுக்கே தரும் முதியவர்; நெகிழ்ச்சிப் பின்னணி!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சட்டை இல்லாமல் துண்டைப் போர்த்திக்கொண்டு நுழைந்த முதியவர் ஒருவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரிக்கிறார்கள். தான் ஒரு யாசகர் என்றும் மக்களிடம் யாசகம்... மேலும் பார்க்க

``பாவப்பட வேண்டாம்; எங்களைச் சமமாக நடத்தினாலே போதும்..!" - சவாலை சாதனையாக்கும் விழிச்சவால் மாணவர்

நம் மனம் பெரும்பாலும் இருப்பவற்றை மறந்து விட்டு, இல்லாதவற்றை நினைத்து ஏங்கும். ஆடம்பரத்தை எதிர்பார்த்து வருந்தும் மனிதர்களுக்கு மத்தியில் அத்தியாவசியத்திற்கே போராடுபவர்களும் உண்டு. நம்மிடம் என்ன இருக்... மேலும் பார்க்க

Mirror Writing: கண்ணாடிக்குள் தெரியும் திறமை... நெல்லை மாணவியின் வியக்க வைக்கும் பயணம்!

1330 திருக்குறளையும் எழுதியிருக்கேன்"ன்னு ஒரு ஆறாம் வகுப்பு மாணவி சொன்னா, 'அட... சூப்பரே!'ன்னுதான் தோணும்.ஆனா, "அதை எல்லாமே மிரர் ரைட்டிங்ல எழுதியிருக்கேன்"ன்னு சொன்ன உடனே ஆச்சர்யம் இன்னும் கொஞ்சம் அத... மேலும் பார்க்க

`சங்கிலியில கட்டிப்போட்டு வச்சிருந்தாங்க' தாயின் 23 வருட தவிப்பு; பஞ்சாபில் கொத்தடிமையாக இருந்த மகன்

கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாகி, பஞ்சாபில் கொத்தடிமையாக இருந்த தனது மகனை அவரது தாய் மீட்டு வந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம், கோவையில் அரங்கேறியுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த சுந்தரி மற்றும் அவரது கணவர் ... மேலும் பார்க்க