செய்திகள் :

ஒரே நம்பர்... 11 கோடி ரூபாய் - லாட்டரி உலகையே திரும்பிப் பார்க்கவைத்த 69 வயது பாட்டி!

post image

அதிர்ஷ்டம் எப்போது கதவைத் தட்டும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த அதிர்ஷ்டம் தன் கதவைத் தட்டும் வரை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொறுமையாகக் காத்திருந்த ஒரு 69 வயதுப் பெண்ணின் கதை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த இந்தப் பெண், பல ஆண்டுகளாக ஒரே எண்களைக் கொண்டு லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். இறுதியில், அவரது அந்த அசாத்தியமான நம்பிக்கை அவருக்கு சுமார் 11.4 கோடி ரூபாய் (1.2 மில்லியன் டாலர்) பரிசைப் பெற்றுத் தந்துள்ளது.

டாலர் - லாட்டரி

இந்த 'லோட்டோ 47' (Lotto 47) லாட்டரி குலுக்கலில் அவர் பயன்படுத்திய எண்கள் 02, 16, 18, 19, 26 மற்றும் 42. குலுக்கல் முடிவுகள் வெளியானபோது, தான் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த அதே எண்கள் திரையில் தோன்றுவதைக் கண்டு அவர் திகைத்துப் போனார். "நான் வழக்கமாகப் பயன்படுத்தும் எண்கள் இவை என்பதால், பார்த்த உடனே எனக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. உடனே என் கணவரை எழுப்பி, நாம் லாட்டரி வென்றுவிட்டோம் என்று நினைக்கிறேன் என்று கூறினேன்," என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சுமார் 10 மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பரிசுத் தொகை தனது குடும்பத்தின் நிதி நிலையை முழுமையாக மாற்றப்போவதாக அவர் கூறுகிறார். குறிப்பாக, தனது கணவர் இனி பணி ஓய்வு பெற்று நிம்மதியாக ஓய்வெடுக்க இந்தப் பணம் உதவும் என்றும், மீதமுள்ள காலத்தை இருவரும் மகிழ்ச்சியாகக் கழிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

கும்பமேளா புகழ் மோனலிசா மைனர்; காதல் கணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு!

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்த கும்பமேளாவில் பாசி மாலை விற்று சோசியல் மீடியாவில் புகழ் பெற்றவர் மோனலிசா. இவர் திடீரேன கடந்த சில மாதங்களுக்கு கேரளாவில் திருவனந்தபுரம் அருகே திடீரென கோயில் ஒன்... மேலும் பார்க்க

வீட்டில் மூட்டைகளில் பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மாவின் டெல்லி வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீப்பிடித்தது. இதனால் தீயை அணைத்தபோது வீட்டில் சாக்குமூட்டையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தத... மேலும் பார்க்க

ஸ்பைடர் மேனுக்கே சவால் விடும் 89 வயது பாட்டி! - 27-வது மாடியிலிருந்து அசால்ட்டாக இறங்கி சாகசம்!

சீனாவின் பெய்ஜிங் நகரில் வசிக்கும் 89 வயது மூதாட்டி ஒருவர், தனது அடுக்குமாடி குடியிருப்பின் 27-வது மாடியில் எதிர்பாராத விதமாகப் படுக்கையறைக்குள் சிக்கிக்கொண்டார். கதவு தானாகப் பூட்டிக்கொண்ட நிலையில், ... மேலும் பார்க்க

ஆந்திரா: நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது விபரீதம்; நீரில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவிகள்!

ஆந்திராவில் செல்ஃபி எடுக்க முயன்ற 3 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திராவின் அனந்தகிரி மண்டலத்தில் உள்ள முலாகும்மி நீர்வீழ்ச்சிக்கு ஜம்புவலசா கிராமத்தைச... மேலும் பார்க்க

தொழிலதிபர் ஆனந்த் அம்பானி பிறந்தநாள் பார்ட்டி - குஜராத்தில் குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முகேஷ் அம்பானி உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் நடத்தி வைத்தார். இப்போது ஆனந்த் அம்பானியின் பிறந்த நாளும் வித்தியாசமான முறையி... மேலும் பார்க்க

துரத்திய போலீஸ்; குளத்திற்குள் 5 மணி நேரம் பதுங்கி இருந்த திருடர்; தாமரை தண்டு மூலம் சுவாசித்தாரா?

மத்தியப் பிரதேசத்தில் திருடன் ஒருவன் போலீஸாரிடமிருந்து தப்பிக்கச் செய்த காரியம் போலீஸாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அங்குள்ள ரயில்களில் அடிக்கடி பெண்களிடம் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் ஒருவ... மேலும் பார்க்க