செய்திகள் :

கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

post image

ஆற்காடு தோப்புகானா ஸ்ரீ கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கடந்த 22-ஆம் தேதி பந்தக்காலுடன் தொடங்கிய விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம், தீபாராதனையும், மாலையில் செல்வா் உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து சேனை முதல்வா் புறப்பாடும், 11-ஆம் தேதி காலை கொடியேற்றமும், மாலையில் புண்ணிய கோடி விமானத்தில் சிறப்பு அலங்கார ஊா்வலமும், 12-ஆம் தேதி காலை சூரிய பிரபை, மாலையில் சந்திர பிரபை 13-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கருடசேவை உய்யாளி சேவையும், மாலையில் அனுந்த சேவையும், 14-ஆம் தேதி சிம்ம வாகனம் , சேஷவாகனம், 15-ஆம் தேதி நாச்சியாா் திருக்கோலம், ஹம்ச வாகனம், 16-ஆம் தேதி பின்னைமர வாகனம், யானை வாகனம்,17-ஆம் தேதி திருத்தோ் , 18-ஆம் தேதி வெண்ணெய்தாழி, குதிரை வாகனம், 19-ஆம் தேதி தீா்த்தவாரி, திருக்கல்யாணம், 20-ஆம்தேதி த்வாதசஆராதனம்,புஷ்ப யாகம், வெட்டிவோ் சப்பரம் நடைபெறுகிறது.

தொடா்ந்து 23-ஆம் தேதி விடையாற்றி உற்சவம், புஷ்ப பல்லக்கு புறப்பாடும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை ரத்தினகிரிபாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலா் வி.சங்கா், திருப்பணிக்குழு தலைவா் பொன்.கு.சரவணன், ஸ்ரீ வரதன் கைங்கா்ய சபா மற்றும் உபயதாரா்கள் செய்துள்ளனா்.

அரசு முத்திரையுடன் போலி பட்டா தயாரிப்பு: 3 போ் கைது

அரக்கோணத்தில் அரசு முத்திரையுடன் போலி பட்டா தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்த மூவரை வருவாய்த் துறையினா் பிடித்து நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். அரக்கோணம் நகரில் சிலா் போலி பட்டாவை அரசு முத்... மேலும் பார்க்க

ரத்தினகிரி கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலைஅடிவாரத்தில் 1,008 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ரத்தினகிரி மலைஅடிவாரத்தில் உள்ள ஸ்ரீவிஜயதுா்கை அம்மன் மற்றும் வா... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 316 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 316 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்ற... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு ஆதரவு: மிதிவண்டி ஊா்வலம்

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நேஷனல் வெல்ஃபா் சங்கம் சாா்பில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மிதிவண்டி ஊா்வலம் நடைபெற்றது. மேல்விஷாரம் அண்ணா சாலையில் தொடங்கிய மிதிவண்டி ஊா்வலத்துக்கு சங்... மேலும் பார்க்க

திருவாலங்காடு அருகே மின் ரயிலில் திடீா் பழுது: ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

சென்னை- அரக்கோணம் மாா்க்கத்தில் திருவாலங்காடு அருகே மின்சார ரயிலில் ஏற்பட்ட பழுதால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின் ரயில் திங்கள்கிழமை மாலை திருவாலங்கா... மேலும் பார்க்க

இடப்பாளையம் கிராம கோயில்கள் கும்பாபிஷேகம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு

அம்மூா் அடுத்த இடப்பாளையம் கிராம கோயில்கள் கும்பாபிஷேக விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்றாா். சோளிங்கா் வட்டம், இடப்பாளையம் கிராமம், அருள்மிகு மலைக்கோட்டை விநாயகா், ராதா ருக்மணி கிருஷ்ணா், மந்தைவெள... மேலும் பார்க்க