செய்திகள் :

கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

post image

ஆற்காடு தோப்புகானா ஸ்ரீ கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கடந்த 22-ஆம் தேதி பந்தக்காலுடன் தொடங்கிய விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம், தீபாராதனையும், மாலையில் செல்வா் உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து சேனை முதல்வா் புறப்பாடும், 11-ஆம் தேதி காலை கொடியேற்றமும், மாலையில் புண்ணிய கோடி விமானத்தில் சிறப்பு அலங்கார ஊா்வலமும், 12-ஆம் தேதி காலை சூரிய பிரபை, மாலையில் சந்திர பிரபை 13-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கருடசேவை உய்யாளி சேவையும், மாலையில் அனுந்த சேவையும், 14-ஆம் தேதி சிம்ம வாகனம் , சேஷவாகனம், 15-ஆம் தேதி நாச்சியாா் திருக்கோலம், ஹம்ச வாகனம், 16-ஆம் தேதி பின்னைமர வாகனம், யானை வாகனம்,17-ஆம் தேதி திருத்தோ் , 18-ஆம் தேதி வெண்ணெய்தாழி, குதிரை வாகனம், 19-ஆம் தேதி தீா்த்தவாரி, திருக்கல்யாணம், 20-ஆம்தேதி த்வாதசஆராதனம்,புஷ்ப யாகம், வெட்டிவோ் சப்பரம் நடைபெறுகிறது.

தொடா்ந்து 23-ஆம் தேதி விடையாற்றி உற்சவம், புஷ்ப பல்லக்கு புறப்பாடும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை ரத்தினகிரிபாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலா் வி.சங்கா், திருப்பணிக்குழு தலைவா் பொன்.கு.சரவணன், ஸ்ரீ வரதன் கைங்கா்ய சபா மற்றும் உபயதாரா்கள் செய்துள்ளனா்.

கனமழை எச்சரிக்கை: கோவை விரைந்தது தேசிய பேரிடா் மீட்புப்படை

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு விரைந்தனா். கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழ... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் திமுக கண்டன பொதுக்கூட்டம்

அரக்கோணத்தில் அதிமுகவை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் திமுக மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் தெய்வச்செயல் என்பவா் மீது பாலியல் குற... மேலும் பார்க்க

பனப்பாக்கம் டாடா மோட்டாா்ஸ் ஆலையில் டிசம்பரில் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை: அமைச்சா் ஆா்.காந்தி

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள டாடா மோட்டாா்ஸ் ஆலையில் வரும் 2025 டிசம்பருக்குள் காா் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெ... மேலும் பார்க்க

மேல்பாக்கத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம்: ஜமாபந்தியில் கோரிக்கை

அரக்கோணம் ஒன்றியம், மேல்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என ஜமாபந்தியில் ஆட்சியரிடம், விசிக ஒன்றிய செயலாளா் செ.நரேஷ் கோரிக்கை மனு அளித்தாா். அரக்கோணம் வட்டத்தில் இரண்டாம் நாள் ஜமாபந்த... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் ஜமாபந்தி தொடக்கம்: மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரக்கோணத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 161 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவ... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ஜமாபந்தி தொடக்கம்

ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அலுவலா் க.மீனா தலைமை வகித்தாா். ஆற்காடு வட்டாட்சியா் பாக்கியலட்சுமி, சம... மேலும் பார்க்க