செய்திகள் :

கச்சா எண்ணெய்: 26 ஆண்டுகளில் இல்லாத விலை குறைப்பு; சவுதியின் இந்த முடிவு இந்தியாவுக்கு குட் நியூஸா?

post image

சவுதி அரேபியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் ஆசிய நாடுகளுக்கு குட் நியூஸ்.

சவுதி அரேபியா தன்னுடைய சொந்த எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவில் (Saudi Aramco) இருந்து 'அரப் லைட்' (Arab Light) எனும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்த எண்ணெயின் விலையை தான் ஆகஸ்ட் மாதம் பேரலுக்கு 11 டாலர் குறைக்க உள்ளது சவுதி அரேபியா. கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சவுதி அரேபியா எண்ணெயின் விலையை குறைத்துள்ளது.

சவுதி அரேபியா
சவுதி அரேபியா

இந்த விலை மற்ற மத்திய கிழக்கு நாடுகளுடன் ஒப்பிடும் போது, பேரலுக்கு 1.50 டாலர் தள்ளுபடி ஆகும்.

எதிர்பார்த்ததை விட...

ப்ளூம்பெர்க் அறிக்கையில், சவுதி அரேபியா கச்சா எண்ணெயின் விலையைப் பேரலுக்கு 8 டாலர்கள் குறைக்கும் என்று கூறியிருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை விட, தற்போது விலை குறைந்துள்ளது.

ஏன் இந்த விலை குறைப்பு?

ஈரான் போர் உச்சத்தில் இருந்தபோது ஒரு பேரல் பிரன்ட் (Brent) எண்ணெய் பேரலுக்கு 115 டாலரை தாண்டியெல்லாம் விற்பனை ஆனது.

ஆனால், இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 72 டாலராக குறைந்துள்ளது.

போரும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளன. இதனால், போட்டிகளை சமாளிக்க சவுதி அரேபியா விலை குறைப்பை செய்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

சமீபத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "இனிமேல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்காது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

நாம் இன்று பெட்ரோல் பங்குகளில் வாங்கும் எரிபொருளானது, கிட்டத்தட்ட 6 வாரங்கள் அல்லது 2 முதல் 3 மாதங்களுக்கு முன்பே சர்வதேச சந்தையிலிருந்து வாங்கப்பட்ட கச்சா எண்ணெயாகும்.

அன்றைய தேதியில் கச்சா எண்ணெயின் விலை, காப்பீட்டுத் தொகை, கப்பல் போக்குவரத்துச் செலவு ஆகியவை அதிகமாக இருந்தன.

அதன் பிறகுதான் சுத்திகரிப்புச் செலவு, மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசின் வாட் வரி மற்றும் டீலர்களுக்கான கமிஷன் ஆகியவை இதில் சேர்க்கப்படுகின்றன.

எனவே, சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் கீழ் சரிந்திருந்தாலும், இந்த மலிவான விலையிலான எண்ணெய் இந்தியாவிற்கு வந்து சேர இன்னும் சில வாரங்கள் ஆகும். அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இதனால், இந்த எண்ணெய் விலை ஆகஸ்ட்டில் அமலுக்கு வந்த உடன், அந்த எண்ணெய் இந்தியாவில் இறக்குமதி ஆகி, அதன் விநியோகம் நாட்டிற்குள் தொடங்கும் போது, பெட்ரோல், டீசல் விலை குறையலாம்.

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க

ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. இந்த நேரத்தில், ஈரானில் உள்ள 'ஹம்ஷஹ்ரி' என்னும் செய்தித்தாள் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஈரான் குற... மேலும் பார்க்க