'எங்களது தலைவரின் ரத்தத்திற்கு பழி வாங்காமல் விடமாட்டோம்' - ஈரான் கூறும் 'அமெரிக...
கடுமையாகும் ஈரான் போர்: முன்பை விட வேகமாக வலுவாகும் அமெரிக்க டாலர்! - இது 'எப்படி' சாத்தியம்?
ஈரான் போருக்கு மத்தியில் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.
சொல்லப் போனால், இந்தப் போருக்குப் பின் தான், அமெரிக்க டாலரின் மதிப்பு பெரியளவில் வலுவடைந்து வருகிறது.
இதற்கான '4' காரணங்கள் என்ன?
> போர் பதற்றத்தில் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்கிறார்கள்.
அப்படியான பாதுகாப்பு முதலீடுகளில் 'அமெரிக்க கருவூலப் பத்திரமும்' ஒன்று.
ஆக, முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் கருவூலப் பத்திரம் உள்ளிட்ட அமெரிக்க சார்ந்த முதலீடுகளுக்கு செல்லும்போது, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாகிறது.

> இந்தியாவைப் போன்று எரிசக்திக்கு இன்னொரு நாட்டை சார்ந்திருக்கும் நாடல்ல அமெரிக்கா.
அமெரிக்காவே எரிசக்தியின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்.
அதனால், கச்சா எண்ணெய் மீதான அழுத்தம் அமெரிக்க டாலரை எட்டவில்லை.
> எரிசக்தியின் விலை அதிகரித்து வருகிறது. இதனால், பணவீக்கம் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் நிலவி வருகிறது.
இதனால், இப்போதைக்கு அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்காது.
இந்த எதிர்பார்ப்பும் டாலரின் மதிப்பை வலுவாக்கி உள்ளது.
> இப்போது நிலவும் நிலையற்ற தன்மையால், உலக நாடுகளுக்கு அமெரிக்க டாலர் தேவை.
காரணம், அது தான் உலகளாவிய நாணயம்.
இதனாலும், நாடுகள் அமெரிக்க டாலர் பக்கம் திரும்பியுள்ளன. இதுவும் அதன் மதிப்பை உயர்த்துகிறது.















