BB Tamil 9: 'ரொம்ப கடுமையா நடந்துக்குறாங்க' - திவ்யாவை குற்றம் சாட்டும் ஹவுஸ் ம...
"கரூர் சம்பவத்தில் நாங்கள் என்ன அப்படியா செய்தோம்?"- தவெக கூட்டத்தில் திமுகவை சாடிய நிர்மல் குமார்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அந்த சமயத்தில் தவெக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சம்பவத்தை அடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

அந்தவகையில் இன்று (நவ.5) மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதில் பேசிய தவெக இணைப் பொதுச் செயலாளர் CTR. நிர்மல் குமார், " குடும்பத்தை வளர்ப்பதற்காகவும் கொள்ளையடிப்பதற்காகவும்தான் ஸ்டாலின் கூட்டங்களை நடத்துகிறார். அவர் நடத்தும் கூட்டங்களை யாரும் கண்டு கொள்வதில்லை.
ஒன்றரை லட்சம் தமிழர்கள் இறந்தபோது திமுகவினர் டெல்லியில் உட்கார்ந்து கொண்டு அமைச்சரவைக்கு பேரம் பேசிக்கொண்டிருந்தனர். கரூர் சம்பவத்தில் நாங்கள் என்ன அப்படியா செய்தோம்?
இந்த சதிகார திமுக கும்பலை அரசியலை விட்டு அனுப்ப வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எண்ணம். இதை தவிர வேறு எதையாவது மாற்றி மக்கள் பேசுகிறார்களா?
ராம்சார் நிலத்தில் கட்டட அனுமதி கொடுத்து பல கோடிகளை கொள்ளையடிக்கிறார்கள்.

மண்ணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ கிட்னியை திருடி ரோல்ஸ் ராய்ஸ் கார் கூட வாங்க முடியவில்லை என வருந்துகிறார். இதுதான் திமுக எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களின் எண்ணம். அவர்கள் இனி திருந்தமாட்டார்கள். நாம்தான் திருந்த வேண்டும்.
தவெகவில் இருக்கும் கட்டமைப்பு வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மட்டும் தான்" என்று பேசியிருக்கிறார்.

















