செய்திகள் :

"கரூர் சம்பவத்தில் நாங்கள் என்ன அப்படியா செய்தோம்?"- தவெக கூட்டத்தில் திமுகவை சாடிய நிர்மல் குமார்

post image

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அந்த சமயத்தில் தவெக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்த சம்பவத்தை அடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டம்
தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டம்

அந்தவகையில் இன்று (நவ.5) மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதில் பேசிய தவெக இணைப் பொதுச் செயலாளர் CTR. நிர்மல் குமார், " குடும்பத்தை வளர்ப்பதற்காகவும் கொள்ளையடிப்பதற்காகவும்தான் ஸ்டாலின் கூட்டங்களை நடத்துகிறார். அவர் நடத்தும் கூட்டங்களை யாரும் கண்டு கொள்வதில்லை.

ஒன்றரை லட்சம் தமிழர்கள் இறந்தபோது திமுகவினர் டெல்லியில் உட்கார்ந்து கொண்டு அமைச்சரவைக்கு பேரம் பேசிக்கொண்டிருந்தனர். கரூர் சம்பவத்தில் நாங்கள் என்ன அப்படியா செய்தோம்?

இந்த சதிகார திமுக கும்பலை அரசியலை விட்டு அனுப்ப வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எண்ணம். இதை தவிர வேறு எதையாவது மாற்றி மக்கள் பேசுகிறார்களா?

ராம்சார் நிலத்தில் கட்டட அனுமதி கொடுத்து பல கோடிகளை கொள்ளையடிக்கிறார்கள்.

தவெக இணைப் பொதுச் செயலாளர் CTR. நிர்மல் குமார்
தவெக இணைப் பொதுச் செயலாளர் CTR. நிர்மல் குமார்

மண்ணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ கிட்னியை திருடி ரோல்ஸ் ராய்ஸ் கார் கூட வாங்க முடியவில்லை என வருந்துகிறார். இதுதான் திமுக எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களின் எண்ணம். அவர்கள் இனி திருந்தமாட்டார்கள். நாம்தான் திருந்த வேண்டும்.

தவெகவில் இருக்கும் கட்டமைப்பு வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மட்டும் தான்" என்று பேசியிருக்கிறார்.

Aadhav Arjuna full speech | `இன்னும் ஆறே மாசம்தான்' | TVK பொதுக்குழு கூட்டம் | Vijay

மக்களை சாவடிக்கும் அரசியலை கலைஞரிடம் இருந்த சீனியர் அரசியல் தலைவர்கள் செய்ய மாட்டார்கள். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த எங்கள் தலைவர் 9 மணியில் இருந்து 6 மணி வரை சாப்பிடாமல் கண்ணீரை மட்ட... மேலும் பார்க்க

இன்று அமெரிக்க உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வரும் ட்ரம்ப் வரி வழக்கு! - வரிகள் திரும்ப பெறப்படுமா?

இன்று (அமெரிக்க நேரப்படி) உலக நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்ட வரி வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.ஏன் இந்த வரி? உலக நாடுகளுடன் அமெரிக்காவிற்கு நிறைய வரி பற்றாக்குற... மேலும் பார்க்க

Asia Cup 2025: பாகிஸ்தான் வீரர் 2 போட்டிகளில் இடைநீக்கம்; பும்ரா, சூர்யகுமார் மீது அபராதம்

2025 ஆம் ஆண்டு ஐசிசி ஆசியக் கோப்பைப் போட்டிகளின் போது பல நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று (நவ 4) உறுதிப்படுத்தியது.குறிப்பாக செப்டம்பர் 14, 21 மற்றும் 28 தேத... மேலும் பார்க்க

TVK Vijay Latest Speech | கரூர் சம்பவம் - அவர்கள் வன்மவாதிகள் | தமிழக வெற்றிக் கழகம்

"நம்ம குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்லமுடியாத வேதனையிலும் வலியிலும் இருந்தோம். அதனால்தான் அமைதி காத்தோம்"- தவெக விஜய் மேலும் பார்க்க

Tvk Vijay Speech: அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? - முதல்வருக்கு தவெக விஜய் கேள்வி

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த... மேலும் பார்க்க

தவெக கூட்டம்: "கரூர் செந்தில் பாலாஜி... அங்க ஏன் போனீங்கன்னு கேட்குறாங்க"- ஆதவ் அர்ஜுனா

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.அந்த ... மேலும் பார்க்க