கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம் | Photo Al...
தொடர்ந்து சொத்துகளைப் பெருக்கும் இந்தியாவின் 1% பணக்காரர்கள்! - G20 அறிக்கை கூறுவது என்ன?
சமீபத்தில் ஜி20 அமைப்பு உலக பொருளாதாரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் முக்கிய குறிப்புகள் இதோ...
> 2000-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரை புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து புதுவித சொத்துகளில் 41 சதவிகிதத்தைக் கைப்பற்றி உள்ளனர் உலகின் 1 சதவிகிதத்தினர்.
> இதில் பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருக்கும் பாதி பேர் வெறும் 1 சதவிகித சொத்தை மட்டுமே பெற்றுள்ளனர்.
> 2000-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை, இந்தியாவின் ஒரு சதவிகித பணக்காரர்கள் தங்களுடைய சொத்துகளை 62 சதவிகிதம் விரிவுப்படுத்தி உள்ளனர்.
> இதே காலக்கட்டத்தில், சீனாவின் பணக்காரர்கள் 54 சதவிகிதம் தங்களது சொத்தை விரிவுப்படுத்தி உள்ளனர்.

> அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா, சீனா போன்ற நாடுகளில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதால், உலக அளவிலான சமத்துவமின்மை ஓரளவு குறைந்துள்ளது.
> இந்த உலக அளவிலான பொருளாதார சமத்துவமின்மை ஜனநாயகம், பொருளாதார நிலைத்தன்மை, பருவநிலை வளர்ச்சி ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
> 2000-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை, உலகின் பாதி நாடுகளில் உள்ள 1 சதவிகித பணக்காரர்கள் தங்களது சொத்துகளைப் பெருக்கி உள்ளனர்.
> 2020-ம் ஆண்டு முதல், உலக அளவில் வறுமையைக் குறைக்கும் விகிதம் மிகவும் குறைத்துவிட்டது.
> தற்போது உலக அளவில் 2.3 பில்லியன் மக்கள் மிதமான அல்லது தீவிர உணவு பாதுகாப்பின்மையை சந்தித்து வருகின்றனர். இது 2019-ம் ஆண்டை விட, 335 மில்லியன் அதிகமாகும்.
> உலக மக்கள் தொகையில் பாதி பேர் அடிப்படை மருத்துவ சேவைகள் பெறுவதில் சிக்கலை சந்திக்கின்றனர். தங்களது கையில் இருந்து பணத்தை வைத்தே மருத்துவ சேவைகளை பெறுவதால், 1.3 பில்லியன் மக்கள் ஏழ்மையில் தள்ளப்பட்டுள்ளனர்.




















