Asia Cup 2025: பாகிஸ்தான் வீரர் 2 போட்டிகளில் இடைநீக்கம்; பும்ரா, சூர்யகுமார் மீ...
BB Tamil 9: வீட்டை எதிர்த்து கல்யாணம், மனைவியின் வைராக்கியம், பிரவீன் பிக்பாஸ் சென்றது ஏன்?
இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் தோற்றுவிடும்போல! அந்தளவுக்கு கூச்சலும் சத்தமுமாக தினமும் காட்சிகள் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல்.
20 போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து பேர் வெளியேறிவிட்டார்கள்.
பிரவீன் காந்தி, ஆதிரை, கலையரசன், நந்தினி,, அப்சரா ஆகியோர் வெளியேறிய நிலையில் பிரஜின், சான்ட்ரா திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகிய நான்கு பேர் வைல்டு கார்டு என்ட்ரியில் நுழைந்திருக்கிறார்கள்.
இந்த சீசனில் பெரும்பாலான போட்டியாளர்கள் சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமானவர்கள்தான். பிரவீன், கமருதீன், சபரி என சிலர் சின்னத்திரை ஏரியா ஆட்கள்.

பிரவீன், ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர். சினிமா முயற்சியில் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் நடிகை ஐஸ்வர்யாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஐஸ்வர்யா 'ராஜா ராணி' முதலான சில சீரியல்களில் நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா பிரவீன் இருவரையும் அறிந்த சிலரிடம் பேசியபோது,
'ராஜா ராணி' ஒளிபரப்பான நாட்களில் ஐஸ்வர்யாவை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிட்டு வர்றது போறது எல்லாமே பிரவீன்தான். காதலை முதன் முதலாச் சொன்னது ஐஸ்வர்யா.
பிரவீன் வீட்டுல இந்தக் காதலுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனா ஐஸ்வர்யா வீட்டுல காதலை ஏத்துக்கல. நண்பர்கள் வட்டாரத்துல சிலர் பேசிப் பார்த்தும் ஐஸ்வர்யாவின் வீட்டுல காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
வேற வழி இல்லாம அந்த எதிர்ப்பை மீறித்தான் ரெண்டு பேரும் சில வருடங்களுக்கு முன்னாடி கல்யாணம் செய்துகிட்டாங்க.
ஒருகட்டத்துக்குப் பிறகு ஐஸ்வர்யா வீட்டுல சமாதானம் ஆகிட்டாங்க, ஐஸ்வர்யா அதை தன் இன்ஸ்டாவில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தாங்க.
அதனால சீரியலோ, சினிமாவோ நாலு காசு சம்பாதிச்சு வாழ்க்கையில ஒரு நிலைக்கு வந்தாகணும் என்கிற வைராக்கியத்துல ரெண்டு பேரும் ஓடிட்டிருக்காங்க' என்றார்கள் அவர்கள்.
'அந்த நிகழ்ச்சிக்குப் போயிட்டு வர்றவங்க பெருசா வர முடியறதில்லன்னு சிலர் இப்பவும் பேசிக்கிட்டுதான் இருக்காங்க. ஆனாலும் 'எல்லாம் நம்ம கையிலதானே இருக்கு, பார்த்துக்கலாம்'னு நம்பிக்கையுடன் கிளம்பிப் போனார். இப்ப அந்த வீட்டுல நடக்கிற சில விஷயங்களைப் பார்க்கிறப்ப கொஞ்சம் பயமாத்தான் இருக்கு' என நெருக்கமானவர்களிடம் கவலையைப் பகிர்ந்து வருகிறாராம் ஐஸ்வர்யா.


















