BB Tamil 9: "28 நாள் பேசாத துஷார் இன்னைக்கு ஏன் பேசுறாரு"- திவ்யா கணேஷ் காட்டம்
BB Tamil 9: `ஆட்டத்தை ஆரம்பித்த பழைய போட்டியாளர்கள்’ - மீண்டும் கலவரம் ஆகும் பிக் பாஸ் வீடு!
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றிருக்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக், பிரியங்கா, மஞ்சரி உள்ளே வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில், " உங்க ஆட்கள் எல்லாரும் குழப்பத்தில இருக்காங்க. அவுங்கள எங்களுக்கு சர்வீஸ் பண்ண சொல்லுங்க" என மஞ்சரியும், தீபக்கும் சொல்ல திவ்யா ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் கூப்பிட்டு "எல்லாரும் 5 மினிட்ஸ்-ல யூனிபார்ம் ஓட எல்லாரும் ரெடியா இருக்க வேண்டும்" என சொல்கிறார்.

இதனைத்தொடர்ந்து திவ்யாவிற்கும், துஷாருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. "மேனேஜர் நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க. மத்தவுங்க அமைதியா இருக்காங்கனு என்னால அமைதியா இருக்க முடியாது" என துஷார், திவ்யாவிடம் கத்த இத்தனை நாள் எப்படி இருந்தீங்க? என அவரை கேள்வி கேட்கிறார்.















