செய்திகள் :

பஞ்சாப்: நண்பரிடம் ரூ.500 கடன் வாங்கி லாட்டரி; காய்கறி வியாபாரிக்குக் கிடைத்த ரூ. 11 கோடி பரிசு

post image

ராஜஸ்தான் மாநில வியாபாரி ஒருவருக்கு லாட்டரியில் ரூ.11 கோடி கிடைத்து இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் அமித் செஹ்ரா. காய்கறி வியாபாரியான அமித், பஞ்சாப் மாநில லாட்டரி வாங்க அமித்திடம் பணம் இல்லை. அந்நேரம் அவரது நண்பர் அவருடன் இருந்தார். அவரிடம் ரூ.500 கடன் வாங்கி சில லாட்டரி சீட்டுக்களை வாங்கினார்.

அமித்திடம் மொபைல் போன் கூட அதிகமாகப் பயன்படுத்த மாட்டார். லாட்டரியில் பரிசு விழுந்திருக்கிறதா என்று பார்க்கவும் தெரியாது. லாட்டரி சீட்டுகளை வாங்கி வீட்டில் வைத்துவிட்டார். திடீரென பஞ்சாப் லாட்டரி துறையில் இருந்து அமித் வீட்டிற்கு போன் செய்து, அமித் வாங்கிய லாட்டரிக்கு ரூ.11 கோடி பரிசு விழுந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

Lottery
Lottery

அதனை அமித் ஆரம்பத்தில் நம்பவில்லை. அதன் பிறகு அவர்கள் எடுத்துச் சொன்னவுடன் அவரால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இது குறித்து அமித் கூறுகையில், "லாட்டரி முடிவுகளை எனக்கு பார்க்கக் கூட தெரியாது. ஆனால் திடீரென எனக்கு லாட்டரி ஏஜென்சியிடமிருந்து போன் வந்தது. அவர்கள் எனக்கு ரூ.11 கோடி பரிசு கிடைத்திருப்பதாகச் சொன்னபோது அதனை என்னால் நம்ப முடியவில்லை.

அவர்கள் எனது வீட்டிற்கு வந்து பரிசு பணத்தை எப்படி வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் லாட்டரி வாங்குவது இதுதான் முதல் முறை. என்னிடம் லாட்டரி வாங்க பணமும் இல்லை. எனவே எனது நண்பன் முகேஷிடம் 500 ரூபாய் வாங்கித்தான் லாட்டரியே வாங்கினேன்.

எனவே எனக்கு லாட்டரி வாங்க ரூ.500 கடன் கொடுத்த எனது நண்பணின் இரண்டு மகள்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். அவர்களுக்குக் கொடுத்த பிறகுதான் அடுத்து பணத்தை என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்'' என்று தெரிவித்தார். அமித் பரிசு பணத்தை வாங்க சண்டிகர் சென்றுள்ளார்.

Check-Olate: சாக்லேட்டை சுகாதார நினைவூட்டியாக மாற்றிய அப்போலோ குழுமம்!

"இது வெறும் சாக்லேட் மட்டுமல்ல; ஒவ்வொரு பெண்ணையும் தனக்காக ஒரு கணம் ஒதுக்கிக்கொள்ளத் தூண்டும் ஓர் அக்கறையான நினைவூட்டல்."அக்டோபர்2025:மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படும் நிலையி... மேலும் பார்க்க

வீட்டு வாசலில் விமானம், தெருவே ரன்வே! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அமெரிக்க நகரம்

அமெரிக்காவில் உள்ள ஒரு நகரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே விமானம் இருக்கும், தெருக்கள்தான் இங்கு விமான ஓடுதளங்கள்.... படிக்கவே ஆச்சரியமாக உள்ளதா? இந்த நகரம் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம... மேலும் பார்க்க

America: தப்பிய ஆய்வகக் குரங்குகள்; பிள்ளைகளைக் காக்க குரங்கை கொன்ற தாய்; சர்ச்சையின் பின்னணி என்ன?

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில், ஆய்வகத்திலிருந்து தப்பித்த குரங்கை ஒரு பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது குழந்தைகளின் பாதுகாப்புக்காகவே இந்தச் செ... மேலும் பார்க்க

`பழைய மெட்ராஸின் கடைசி எச்சங்களாக எஞ்சி நிற்கும் குதிரை லாயம்’ - சென்னை `ஜட்கா வண்டி’ தொழிலின் நிலை

சென்னை மாநகரம், இது 350 ஆண்டுகள் பழமையான ஒரு நகரம். வங்க கடலோரம் சாதாரண சிறு சிறு புள்ளிகளாக இருந்த கிராமங்கள், இன்று காட்டு மரம் போல் பூகோள பரப்பில் மிகப்பெரிய மாநகரமாக வளர்ந்து நிற்கிறது.ஆங்கிலேயர்க... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: "ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு ரூ.30,000 கொடுப்போம்" - தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பீகாரில் நாளை மறுநாள் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அப்பகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமித்... மேலும் பார்க்க

`அவரின் மகிழ்ச்சிதான் முக்கியம்’ - 15 ஆண்டு வாழ்ந்த மனைவியை காதலனுக்கு மணம் செய்து வைக்கும் கணவன்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனது கணவரை காதலன் துணையோடு கொலை செய்து உடலை ஊதா கலர் டிரம்மில் சிமெண்ட் போட்டு அடைத்து வைத்தார். நாடு முழுவதும் பெரும் பரபரப்ப... மேலும் பார்க்க