செய்திகள் :

வீட்டு வாசலில் விமானம், தெருவே ரன்வே! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அமெரிக்க நகரம்

post image

அமெரிக்காவில் உள்ள ஒரு நகரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே விமானம் இருக்கும், தெருக்கள்தான் இங்கு விமான ஓடுதளங்கள்.... படிக்கவே ஆச்சரியமாக உள்ளதா? இந்த நகரம் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள 'கேமரூன் ஏர்பார்க்' என்ற இந்த நகரம் குறித்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இந்த வீடியோவின்படி, கார்களுக்குப் பதிலாக விமானங்கள் நிறைந்திருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதி காட்சியளிக்கிறது.

cameron airpark

வைரலாகும் வீடியோவில், வீடுகளுக்கு வெளியே சிறிய ரக விமானங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை காண முடிகிறது. இந்த விமானங்கள் வெறும் பொருள்கள் அல்ல.

நகரத்தின் தெருக்கள் அகலமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் நேரடியாக தெருவில் ஓட்டிச் சென்று, அங்கிருந்தே வானில் பறக்க முடிகிறது. தெருவின் நடுவே அமைக்கப்பட்டுள்ள ரன்வே இதற்கு உதவியாக உள்ளது.

இந்த நகரத்தின் மற்றொரு சிறப்பம்சம், இங்குள்ள போக்குவரத்து சிக்னல்கள், வழக்கத்தை விட தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளன. விமானங்களின் இறக்கைகள் மீது மோதாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேமரூன் ஏர்பார்க் 1963 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓய்வுபெற்ற ராணுவ விமானிகளுக்காக உருவாக்கப்பட்டது. காலப்போக்கில், இங்கு பணியில் இருக்கும் விமானிகளும் குடியேறத் தொடங்கினர். தற்போது விமானப் போக்குவரத்து மீது ஆர்வம் கொண்ட பலரும் இங்கு வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

America: தப்பிய ஆய்வகக் குரங்குகள்; பிள்ளைகளைக் காக்க குரங்கை கொன்ற தாய்; சர்ச்சையின் பின்னணி என்ன?

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில், ஆய்வகத்திலிருந்து தப்பித்த குரங்கை ஒரு பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது குழந்தைகளின் பாதுகாப்புக்காகவே இந்தச் செ... மேலும் பார்க்க

`பழைய மெட்ராஸின் கடைசி எச்சங்களாக எஞ்சி நிற்கும் குதிரை லாயம்’ - சென்னை `ஜட்கா வண்டி’ தொழிலின் நிலை

சென்னை மாநகரம், இது 350 ஆண்டுகள் பழமையான ஒரு நகரம். வங்க கடலோரம் சாதாரண சிறு சிறு புள்ளிகளாக இருந்த கிராமங்கள், இன்று காட்டு மரம் போல் பூகோள பரப்பில் மிகப்பெரிய மாநகரமாக வளர்ந்து நிற்கிறது.ஆங்கிலேயர்க... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: "ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு ரூ.30,000 கொடுப்போம்" - தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பீகாரில் நாளை மறுநாள் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அப்பகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமித்... மேலும் பார்க்க

`அவரின் மகிழ்ச்சிதான் முக்கியம்’ - 15 ஆண்டு வாழ்ந்த மனைவியை காதலனுக்கு மணம் செய்து வைக்கும் கணவன்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனது கணவரை காதலன் துணையோடு கொலை செய்து உடலை ஊதா கலர் டிரம்மில் சிமெண்ட் போட்டு அடைத்து வைத்தார். நாடு முழுவதும் பெரும் பரபரப்ப... மேலும் பார்க்க

பெயரே இல்லாத ரயில் நிலையம்; மஞ்சள் பலகை மட்டுமே அடையாளம் - சுவாரஸ்யத் தகவல்

இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் இருக்கும். ஆனால் எந்தப் பெயரும் எழுதப்படாமல், வெறும் மஞ்சள் பலகையுடன் செயல்படும் ஒரு விசித்திரமான ரயில் நிலையம் இந்திய... மேலும் பார்க்க

திருப்பதியில் ஏமாற்றம்: சொந்தமாக கோயில் கட்டிய விவசாயி - ஆனால் கடைசியில் நடந்தது என்ன?

ஆந்திராவில் தனியார் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலாசா-காசிபுக்கா பகுதியில் ஸ்ரீவெங்கடேஸ்வர சுவா... மேலும் பார்க்க