செய்திகள் :

"பிரம்மயுகம் ஒரு மறக்க முடியாத பயணம்" - நெகிழ்ந்த மம்மூட்டி

post image

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் மம்மூட்டி நடிப்பில் கடந்த 2024, பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் பிரம்மயுகம். இந்த படத்துக்காக மம்மூட்டி, 2025 ஆம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளில் 'சிறந்த நடிகர்' விருதைப் பெற்றுள்ளார்.

வித்தியாசமான கதைக்களம் மற்றும் அசத்தலான மேக்கிங்குக்காக திரையுலகில் பேசப்பட்ட திரைப்படம் பிரம்மயுகம். இதற்காக மம்மூட்டி தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

Mammooty

கேரள மாநில திரைப்பட விருதுகளில் கிடைத்த அங்கீகாரத்துக்காக பிரம்மயுகம் குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மம்மூட்டி.

விருது வென்ற சக திரைத்துறையினரை வாழ்த்தியவர், "ஷாம்லா ஹம்சா, ஆசிப், டோவினோ, சௌபின், சித்தார்த், ஜோதிர்மயி, லிஜோ மோல், தர்ஷனா, சிதம்பரம் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ், பூகேன்வில்லியா, பிரேமலு படக்குழுவினர், கேரள மாநில விருதுகளை வென்ற அனைத்து படக்குழுக்களும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இப்படி ஒரு மறக்கமுடியாத பயணத்தை எனக்கு பரிசளித்த பிரமயுகம் குழுவினருக்கு மிக்க நன்றி. கொடுமோன் பொட்டியை மிகுந்த அன்புடன் வரவேற்ற பார்வையாளர்களுக்கு இந்த அங்கீகாரத்தை சமர்ப்பணம் செய்கிறேன்." என தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

"எடப்பாடி பழனிசாமியால் தான் தி.மு.க-வில் சேர்ந்தார் மனோஜ் பாண்டியன்" - டிடிவி தினகரன் பேச்சு

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே சிங்கம்பட்டியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். "மனோஜ் பாண்டியன் எதையும் ஆழ்ந்து யோசித்து செய்யக்கூடியவர். அவர் தி... மேலும் பார்க்க

தொடங்கிய SIR தெளிவில்லாத ECI | BJP அரசுமீது CJI GAVAI குற்றச்சாட்டு| DMK பொன்முடிக்கு மீண்டும் பதவி

* 12 மாநிங்களில் இன்று முதல் SIR பணிகள் தொடக்கம்!* SIR நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல்!* தேர்தல் ஆணையம் நியாயமாக நடப்பதால்தான் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு... மேலும் பார்க்க

TVK : 'அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு எங்களை ஏன் அழைக்கவில்லை?' - தவெக காட்டம்!

அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதுசம்பந்தமாக மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்துக் கட்சி... மேலும் பார்க்க

TVK : 'கரூர் சம்பவத்துக்கு பிறகு வெளியில் வரும் விஜய்!' - சிறப்புப் பொதுக்குழுவின் திட்டம் என்ன?

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக வெளியில் வந்து நிர்வாகிகள் மத்தியில் பேசவிருக்கிறார் விஜய். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தவெகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நாளை நடக்கவிருக்கிற... மேலும் பார்க்க

"கொலை முயற்சி தாக்குதல்; அன்புமணி தான் காரணம்" - பாமக எம்.எல்.ஏ அருள்

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது ஆதரவாளர்களை பா.ம.க, எம்.எல்.ஏ அருள் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார். இதனிடையே பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போ... மேலும் பார்க்க