செய்திகள் :

திருப்பதியில் ஏமாற்றம்: சொந்தமாக கோயில் கட்டிய விவசாயி - ஆனால் கடைசியில் நடந்தது என்ன?

post image

ஆந்திராவில் தனியார் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலாசா-காசிபுக்கா பகுதியில் ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி என்ற தனியார் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் திடீரென பக்தர்கள் கூட்டம் கூடியது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்பாராத விதமாக பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக குவிந்ததே இந்த துயர சம்பவத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சோக சம்பவம் குறித்து ஆந்திர அறநிலையத் துறை அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டி விளக்கமளித்துள்ளார். அதில், இந்தக் கோயில் முழுவதும் தனியாருக்குச் சொந்தமானது என்றும், கோயில் நிர்வாகம் தொடர்பான எந்த தகவல்களும் அரசிடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோவில்

கோயில் கட்டப்பட்டதன் பின்னணி

திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் தனக்கு முறையான தரிசனம் கிடைக்காததால், தனது சொந்த விவசாய நிலத்தில் இந்தக் கோயிலைக் கட்டியதாக அதன் நிர்வாகி ஹரிமுகுந்த பண்டா தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்புதான் இந்தக் கோயில் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், "திருப்பதிக்கு சென்றபோது பல மணி நேரம் காத்திருந்தும், சில நொடிகளில் எங்களை வெளியேற்றிவிட்டார்கள். சரியாக தரிசனம் கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் சொந்த நிலத்திலேயே கோயில் கட்டலாம் என்று யோசனை வந்தது.

கடந்த ஆறு ஆண்டுகளாகத் தனது விவசாய வருமானத்தைக் கொண்டு, யாரிடமும் நன்கொடை பெறாமல் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளேன்.

திருப்பதியிலிருந்து 9 அடி உயர வெங்கடேஸ்வரர் சிலை, ஸ்ரீதேவி, பூமாதேவி சிலைகள் கொண்டுவரப்பட்டு வேத பண்டிதர்களின் வழிகாட்டுதலின்படி கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் சுவர்களில் இராமாயணம், மகாபாரதம் மற்றும் பகவத் கீதை கதைகள் சிலை வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காகத் தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபமும் கட்டப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார் ஹரிமுகுந்த பண்டா.

இந்த விபத்து குறித்து ஹரிமுகுந்த பண்டா கூறுகையில், "வழக்கமாக இரண்டாயிரம் பக்தர்கள் மட்டுமே வருவார்கள். ஆனால், இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

பெயரே இல்லாத ரயில் நிலையம்; மஞ்சள் பலகை மட்டுமே அடையாளம் - சுவாரஸ்யத் தகவல்

இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் இருக்கும். ஆனால் எந்தப் பெயரும் எழுதப்படாமல், வெறும் மஞ்சள் பலகையுடன் செயல்படும் ஒரு விசித்திரமான ரயில் நிலையம் இந்திய... மேலும் பார்க்க

தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.3000 கோடி சொத்து பறிமுதல்; அமலாக்கப்பிரிவு அதிரடி மேலும் தொடருமா?

தொழிலதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால், அவரது பல நிறுவனங்கள் திவாலானது. இதைத் தவிர, யெஸ் வங்கி உட்பட பல வங்கிகளில் கடன் வாங்கியதும், ... மேலும் பார்க்க

Golden Toilet: 101 கிலோ தங்கத்தில் கழிவறைக் கோப்பை; 10 மில்லியன் டாலர் செலவு - எங்கே தெரியுமா?

புதிய வீடுகளை கட்டுபவர்கள் இன்றைக்கு புதுப்புது வடிவங்களில் கழிவறைகளை அமைத்து வருகின்றனர். கழிவறைகளுக்காகவே பல லட்சம் ரூபாய் செலவு செய்யும் குடும்பங்களும் உள்ளன. இப்படிப்பட்ட ஆடம்பர கழிவறைகளை விரும்பு... மேலும் பார்க்க

``விழிப்புடன் இருங்கள்; இல்லாவிட்டால் அனகொண்டா வந்துவிடும்" - எச்சரித்த உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் அடுத்த ஓரிரு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் கமிஷன், தலைமை தேர்தல் கமிஷனிடம்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித்பவார் எரிச்சல்

விவசாயிகள் கடனை தள்ளுபடிநாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். எந்த புதிய அரசு பதவியேற்றாலும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய தயங்குவதில்லை. ... மேலும் பார்க்க

சென்னை: பாரம்பர்ய உடை அணிந்து 'தமிழ்நாடு தினம்' கொண்டாடிய கல்லூரி மாணவிகள் | Photo Album

தமிழ்நாடு நாள் எது? ஏன் இந்தச் சர்ச்சை? மாநில உரிமைகளைப் பாதுகாப்பது எப்படி? மேலும் பார்க்க