செய்திகள் :

``என் கணவருக்கு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறுவார்கள், ஆனால்'' - பாலிவுட் நடிகர் கோவிந்தா மனைவி

post image

பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கும், அவரது மனைவி சுனிதா அஹுஜாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் அதனை இருவரும் மறுத்து வருகின்றனர். கோவிந்தா மும்பையில் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசிக்காமல், அருகில் வேறு ஒரு வீட்டில் வசிக்கிறார். இதை காரணமாகக் காட்டி, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

இருவரும் ஒருமுறை விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதன் பிறகு அவர்கள் கவுன்சிலிங் மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். விநாயகர் சதுர்த்தியன்று இருவரும் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

கோவிந்தா மராத்தி நடிகை ஒருவருடன் திருமணத்துக்கு வெளியான உறவு வைத்திருப்பதுதான் இவை அனைத்திற்கும் காரணம் என்று இணையத்தில் பரவியது.

மனைவி சுனிதா உடன் கோவிந்தா
மனைவி சுனிதா உடன் கோவிந்தா

`பெண்கள் சொந்த சம்பாத்தியம் வேண்டும்'

இதுகுறித்து கோவிந்தாவின் மனைவி சுனிதா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், “அனைத்துப் பெண்களுக்கும் வருமான ஆதாரம் இருக்க வேண்டும்; அவர்கள் கணவனைச் சார்ந்திருக்கக் கூடாது.

நான் யூடியூப் தொடங்கிய நான்கு மாதத்திலேயே வருமானம் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு பெண் சொந்தமாக எழுந்து நிற்க வேண்டும். உங்கள் பணத்தை நீங்களே சம்பாதிப்பது ஒரு வேறு விதமான மகிழ்ச்சியைத் தருகிறது.

உங்கள் கணவர் பணம் கொடுக்கிறார், ஆனால் அவர் 10 முறை கேட்ட பிறகு ஒரு முறை கொடுப்பார். ஆனால் உங்கள் சொந்த சம்பாத்தியம் உங்களுடையது.

எனது கணவர் கோவிந்தாவிடம் ஒரு பெரிய வீட்டைக் கோர விரும்புகிறேன். மகள் டினா மற்றும் மகன் யாஷுடன் நாங்கள் 4 படுக்கையறைகள் கொண்ட வீட்டில் வசித்து வருகிறோம். இந்த வீடு எங்களுக்கு சிறியது. எனவே ஒரு பெரிய 5 படுக்கையறைகள் கொண்ட வீடு வாங்கி கொடுக்கும்படி எனது கணவரிடம் கேட்பேன்,” என்று தெரிவித்தார்.

சுனிதா, கோவிந்தா
சுனிதா, கோவிந்தா

வதந்திகளை நம்புவதில்லை

கோவிந்தாவிற்கு மராத்தி நடிகையுடன் தொடர்பு இருப்பது குறித்து அந்த நிகழ்ச்சியில் கேட்டபோது,

“எனது கணவருக்கு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இதுவரை என் கண்ணால் நேரில் பார்த்ததில்லை. அவர்களை கையும் களவுமாக பிடித்ததுமில்லை. அதனால் அதுகுறித்து நான் இதுவரை வாய் திறக்கவில்லை. நான் வதந்திகளை நம்புவதில்லை. அவருக்கு இத்தகைய செயலில் ஈடுபடக்கூடிய வயது இல்லை. அவர் தனது மகள் மற்றும் மகனின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்,” என்றார்.

கோவிந்தாவும் சுனிதாவும் காதலித்து 1987-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

`காருடன் கடலில் சென்ற பிரபலங்கள்' கடற்கரை பண்ணை வீட்டில் 60வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாருக்

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு இன்று 60வது பிறந்தநாள். இப்பிறந்தநாளை ஷாருக் கான் தனது பண்ணை வீட்டில் வைத்து கொண்டாட முடிவு செய்தார். இதற்காக தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் ஷாருக் கான் அழைப்பு வ... மேலும் பார்க்க

Shah Rukh Khan: அம்மாவுக்கு மருந்து வாங்க காசில்லாத வறுமை; 'பாலிவுட் சாம்ராஜ்ய நாயகன்' உருவான கதை

எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையில் உச்சம் தொட்டவர்களின் பின்னணி கதை பெரும் பாடமாக இருக்கும். குறிப்பாக திரையுலகில் மாபெரும் இடத்தைப் பிடித்த ரஜினி முதல் விஜய் சேதுபதி வரை பலரும் பெரும் துயரத்த... மேலும் பார்க்க

Abhishek Bachchan: பணம் கொடுத்தா விருது வாங்கினேன்?- விளக்கம் அளித்த அபிஷேக் பச்சன்

அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் 'I Want To Talk' என்ற படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதை வென்றார். ஆனால் அந்த விருதை அவர் திறமையால் வெல்லவில்லை பணம் கொடுத்தும், பிஆர் வேலைகள் செய்தும்தான் வா... மேலும் பார்க்க

"அந்தப் பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது" - விவசாயப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட கங்கனா ரனாவத்

வேளாண் திருத்த மசோதாவை எதிர்த்து 2020-21-ம் ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகையும், பா.ஜ.க எம்.பி-யுமான கங்க... மேலும் பார்க்க

"8 மணிநேர வேலை வேண்டும்; நான் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும்" - ராஷ்மிகா பளிச் பதில்

ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'தி கேர்ள்ஃபிரண்ட்' திரைப்படம் நவம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதன் வெளியீட்டையொட்டி நடந்த இப்படத்தின் நிகழ்ச்சியில், சமீபத... மேலும் பார்க்க

பலூசிஸ்தான் விவகாரம்: சல்மான் கானை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்; என்ன நடந்தது?

பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் ரியாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது அவர் தெரிவித்த சில கருத்துக்கள் பாகிஸ்தானை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.மத்திய கிழக்கு நாடுகளில் இந்த... மேலும் பார்க்க