செய்திகள் :

"அந்தப் பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது" - விவசாயப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட கங்கனா ரனாவத்

post image

வேளாண் திருத்த மசோதாவை எதிர்த்து 2020-21-ம் ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகையும், பா.ஜ.க எம்.பி-யுமான கங்கனா ரனாவத், ஒரு வயதான பெண்ணின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.

தொடர்ந்து, ``டைம் (Time) பத்திரிகையால் மிகவும் சக்திவாய்ந்த இந்தியர் என்று குறிப்பிடப்பட்ட அதே தாதி (பாட்டி) இவர் தான். மேலும், இவர் 100 ரூபாய்க்குக் கிடைக்கிறார். பாகிஸ்தானியப் பத்திரிகையாளர்கள், இந்தியாவின் சர்வதேச மக்கள் தொடர்பு (PR) முயற்சிகளைக் கேவலமான முறையில் கைப்பற்றிவிட்டனர். சர்வதேச அளவில் நமக்காகப் பேச நமது ஆட்களே தேவை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அவர் பகிர்ந்திருந்த படம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 73 வயதான மஹிந்தர் கவுர். இவர் வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டக்களத்தில் கலந்துகொண்டவர்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

எங்கள் போராட்ட முறையை இழிவு படுத்தியிருக்கிறார் என பதிண்டா மாவட்ட நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்திருந்தார்.

பிப்ரவரி 2022-ல் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'கங்கனா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என்று சம்மன் அனுப்பியது. இந்த உத்தரவால் கோபமடைந்த கங்கனா ரனாவத், ஜூலை 2022-ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை அணுகி, அவதூறு புகாரையும் கீழ் நீதிமன்றத்தின் சம்மன் உத்தரவையும் ரத்து செய்யக் கோரினார்.

ஆனால், இந்த மனுவை ரத்து செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறிய உயர் நீதிமன்றம் கங்கனா ரனாவத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

உச்ச நீதிமன்றமும் கங்கனா ரனாவத்தின் மனுவை ஏற்க முடியாது எனக் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி தெரிவித்தது. இந்த நிலையில், கங்கனாவின் வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் சிறப்பு விடுப்பு மனுவை (SLP) வாபஸ் பெற விரும்புவதாகத் தெரிவித்தார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

அதற்காக கங்கனா ரனாவத் திங்கள்கிழமை பதிண்டா நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், ``மகிந்தர் ஜியின் குடும்பத்தில் என்னை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எப்படி அந்தப் பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறித்து மஹிந்தர் கவுரின் கணவருக்கு நான் ஒரு செய்தி அனுப்பியிருக்கிறேன்.

இந்தச் சர்ச்சையை என் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. எந்த மாநிலத்தைச் சேர்ந்த தாதாவாக இருந்தாலும் எனக்கு மரியாதைக்குரியவர். மேலும் எந்த நபருக்கும் எதிராக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்தில் ஆஜரான உடனேயே, மஹிந்தர் கவுரின் கணவரிடம் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டிருக்கிறேன்" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக 2024-ம் ஆண்டு, சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது ஒரு பெண் CISF கான்ஸ்டபிளால் நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த விவகாரம் விவாதமானது குறிப்பிடத்தக்கது.

"8 மணிநேர வேலை வேண்டும்; நான் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும்" - ராஷ்மிகா பளிச் பதில்

ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'தி கேர்ள்ஃபிரண்ட்' திரைப்படம் நவம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதன் வெளியீட்டையொட்டி நடந்த இப்படத்தின் நிகழ்ச்சியில், சமீபத... மேலும் பார்க்க

பலூசிஸ்தான் விவகாரம்: சல்மான் கானை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்; என்ன நடந்தது?

பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் ரியாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது அவர் தெரிவித்த சில கருத்துக்கள் பாகிஸ்தானை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.மத்திய கிழக்கு நாடுகளில் இந்த... மேலும் பார்க்க

``முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை" - பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா காலாமானார்

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா இயற்கை எய்தினார். 74 வயதான இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். தீவிர சிகிச்சையைத் தொடர்ந்து நேற்றைய தினம் இவரின் உடல்நிலை மோசமாகியிரு... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது ஏன்? - `வெளிப்படைத்தன்மை முக்கியம்' ஜான்வி கபூர் ஓபன் டாக்

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், எப்போதும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தனது காதலனை அழைத்து செல்வது வழக்கம். ஜான்வி கபூர் ... மேலும் பார்க்க

மகளை அறிமுகப்படுத்திய தீபிகா - ரன்வீர் தம்பதி; வைரலாகும் புகைப்படம்

பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்கள் மகள் துவாவுடன் இந்த தீபாவளியைக் கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகர்ந்துள்ளனர். செப்டம்பர் 2024-ல் துவா பிறந்தார். தீபிகா பட... மேலும் பார்க்க

Alia Bhatt: "பால்வெளி தெருவில் அமுதூறிய முகமே!" - தீப ஒளியில் மின்னும் ஆலியா பட் | Photo Album

Alia bhatt: போலி பில்கள் தயாரிப்பு; நடிகையிடம் ரூ.77 லட்சம் மோசடி செய்த முன்னாள் உதவியாளர் கைது மேலும் பார்க்க