பைசன்: "மாரி(மழை) வந்துகொண்டிருக்கும் போது மாரி செல்வராஜுக்கு என்னங்க பாராட்டு?"...
'தேர்தல் தோல்வி... பிரதமரிடம் இருந்து வந்த அழைப்பு..' - மனம் திறந்த சி.பி.ராதாகிருஷ்ணன்
சி.பி. ராதாகிருஷ்ணன் நாட்டின் குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று தமிழ்நாடு வந்தார். இன்று காலை கோவை வந்த அவருக்கு தொழில் அமைப்புகள் சார்பில் கொடிசியா அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கோவையின் முக்கிய தொழிலதிபர்கள், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், ஹெச்.ராஜா, அண்ணாமலை, வானதி சீனிவாசன்,

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அக்கட்சி எம்எல்ஏக்கள், திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், " நான் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றதும் முதலில் சென்னை வருவதுதான் திட்டம். மாநிலத்தின் தலைநகருக்கு வருவதுதான் மரபு. அதே தேதியில் செசல்ஸ் நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்கு செல்லுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

அதனால் திட்டம் மாறி கோவை மண் என்னை இழுத்து வந்ததாகக் கருதுகிறேன். இந்த மண்ணிலிருந்துதான் என் பொதுவாழ்க்கை தொடங்கியது. இங்கு பலரும் பலதரப்பட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். உங்களில் ஒருவனாக எல்லாவற்றுக்கும் உறுதுணையாக இருப்பேன்.
நான் எம்பியாக இருந்தபோது, என்டிசி தொழிலாளர்களின் போனஸ் பிரச்னை இருந்தது. நாங்கள் முயற்சிசெய்து அந்தப் பிரச்னைக்குத் தீர்வை எட்டினோம். யாரையும் அதிகம் பாராட்டாத சிஐடியூ தொழிற்சங்க தலைவர் நஞ்சப்பன் என்னை பாராட்டி வாழ்த்தினார். நான் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தபோது, மோடி என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.


ஒரு சில நாட்களில் என்னை ஜார்க்கன்ட் ஆளுநராக நியமித்தனர். வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் அதை ஒரு மனதோடு ஏற்பவர்களுக்குத்தான் வெற்றி அதிகம் கிடைக்கும். முயற்சி நம் கையில் இருந்தாலும், முடிவு இறைவன் கையில்உள்ளது. தர்மமும், உண்மையும் நம்மிடம் இருந்தால் எல்லாமே சாத்தியம்.” என்றார்.



















