செய்திகள் :

பைசன்: "மாரி(மழை) வந்துகொண்டிருக்கும் போது மாரி செல்வராஜுக்கு என்னங்க பாராட்டு?" - தமிழிசை கேள்வி

post image

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான 'பைசன்' திரைப்படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகளை மீறி, தடைகளை உடைத்து சாதிக்கும் இளைஞரின் ஸ்போர்ட்ஸ் திரைப்படமான இப்படத்தை அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அவ்வகையில் முதல்வர் ஸ்டாலின் 'பைசன்' படத்தைப் பார்த்துவிட்டு, "மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்!" என்று நேரில் அழைத்து மரியாதை செய்து பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் மழைக்காலத்தில் மக்கள் பணியைவிட்டுவிட்டு சினிமா பார்ப்பதாக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ஸ்டாலினை எக்ஸ் தளத்தில் விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் தமிழிசை செளந்தரராஜன், "முதல்வர் ஸ்டாலினின் செயல் மிகுந்த வேதனைக்குரியது. அவருடைய சன்(son) துணை முதல்வராக்கிவிட்டார், விவசாயிகள் சன் (son) பத்தி கவலையில்லை, அதுனால ஸ்டாலின் 'பைசன்' பார்த்துக் கொண்டிருக்கிறார். மக்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றால் மழையில் அவர்களிடைய சன் (sun) உதய சூரியன் காணாமல் போய்விடும்.

மாரி (மழை) வந்துகொண்டிருக்கும்போது மாரி செல்வராஜுக்கு என்னங்க பாராட்டு?

 தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

அதிமுக அமிஷ்ஷாவிற்கு அடிமையாக இருக்கிறது என்கிறார்கள். அப்படியென்றால் திமுக, ராகுல் காந்திக்கு அடிமையாக இருக்கிறது என்று கூறலாமா? பாஜக - அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. அதற்காக அடிமை என்றெல்லாம் சொல்வது அவதூறானது.

இந்த மக்களுக்கு எதிரான ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். மக்களைக் கண்டுகொள்ளாத ஆட்சி விரைவில் தூக்கி எறியப்படும்" என்று விமர்சித்துப் பேசியிருக்கிறார் தமிழிசை செளந்தரராஜன்.

கேரளாவிலும் 'SIR' : ``இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவால்" - கேரள முதல்வர் பினராயி விஜயன்

பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (Bihar SIR)' மேற்கொள்ளப்படவிருக்கிறது. நவம்பர் மாதங்களில் இதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கவிருக்... மேலும் பார்க்க

தென்காசி: முதல்வர் வருகையின் போது மோசடியாக இலவச பட்டா? - மேலகரம் பெண்கள் புகாரின் பின்னணி என்ன?

முதல்வர் வருகையின் போது மோசடியாக இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், தகுதி உள்ள நபர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கவில்லையென்றால் முதல்வர் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மேலகரம் ... மேலும் பார்க்க

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டடம்; அனுமதி வழங்கி துணை நிற்கும் அரசு நிர்வாகம்? - முழு பின்னணி

சென்னை பெரும்பாக்கத்தில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில், சட்டத்துக்கு புறம்பாக குடியிருப்பு கட்டுமானங்களுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையும், வனத்துறையும், சென்னை பெருந... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: வாய்க்காலில் கலக்கும் கழிவுநீர்; தீர்வின்றி அல்லாடும் கிராம மக்கள்!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே ஆறுபாதியில் உள்ள சத்தியவாணன் வாய்க்கால், சுற்றியுள்ள 21க்கும் மேற்பட்ட கிராமங்களுங்கும் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கும் முக்கிய நீர் பாசனமா... மேலும் பார்க்க

பள்ளிக்கரணை: `சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி; எத்தனை கோடி கைமாறியது?' - அரசை சாடும் சீமான்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழித்து 2,000 கோடி ரூபாய் அளவில் ஊழல் ஏற்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அ... மேலும் பார்க்க

ஜார்கண்ட்: `குழந்தைகளுக்கு HIV ரத்தம்?' - மருத்துவமனையின் அலட்சியத்தால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாய்பாசா நகரில் ஒரு அரசு மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தலசீமியா என்பது இரத்த சிவ... மேலும் பார்க்க