செய்திகள் :

Delta விவசாயிகளின் கண்ணீர் கதை: நெல் கொள்முதலில் தோல்வியடைந்த ஸ்டாலின் அரசு | Ground Report

post image

இந்த ஆண்டு வழக்கத்தைவிட டெல்டாவில் இரண்டு மடங்கு அதிகமாக குறுவை சாகுபடி நடந்துள்ளது. விவசாயிகள் எதிர்பார்த்ததைவிட நல்ல மகசூலும் கிடைத்தது. ஆனால், இதற்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய விவசாயிகள் துயரத்தில் இருக்கிறார்கள்.

காரணம், தமிழக அரசின் அலட்சியம். இந்த முறை அதிகமான விளைச்சல் வரும் என்பது தெரிந்திருந்தும், அதனை தங்கு தடையில்லாமல் காலத்தோடு கொள்முதல் செய்வதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்யவில்லை.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடம் இல்லை, சாக்கு இல்லை, சணல் இல்லை என்று காரணங்களைச் சொல்லி கொள்முதலைத் தாமதப்படுத்தினர். விளைவு, இரவு பகல் பாராமல் உழைத்து விளைவித்த நெல் பயிர்கள், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய வாசலிலேயே முளைக்க ஆரம்பித்துவிட்டன.

இன்னொரு பக்கம், பல விவசாயிகளுடைய நெல் பயிர்கள் மழைக்குச் சாய்ந்து வயலிலேயே முளைக்க ஆரம்பித்துவிட்டன. இதுமாதிரியான இன்னல்களும் துயரங்களும் டெல்டா விவசாயிகளின் அடையாளமாகவே மாறிவிட்டன. காலம் மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும் விசாயிகளின் நிலை மட்டும் மாறவே இல்லை. என்ன சொல்கிறார்கள் டெல்டா விவசாயிகள் என்பதை விரிவாகப் பதிவு செய்கிறது Vikatan Ground Report ...

"நாளைக்கு என்னாகும் தெரியாது" - பொடி வைத்த ஜோடங்கர் - காங்கிரஸ் கணக்கு என்ன?

விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கரின் இல்லத் திருமண விழா, அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று(அக்.27-ம் தேதி) நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திமுக-வும் கா... மேலும் பார்க்க

புதுவை: பெண்களுக்கு Night Shift தடை: "பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என அரசு ஒப்புக்கொள்கிறதா?"- திமுக

பெண்களை இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்துவதற்குத் தடை விதித்து புதுச்சேரி தொழிலாளர் துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது. அதுகுறித்துப் பேசியிருக்கும் புதுச்சேரி தி... மேலும் பார்க்க

கோவையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா!

குடியரசு துணைத் தலைவரை வரவேற்ற தமிழக அமைச்சர்கள் குடியரசு துணைத் தலைவரை வரவேற்ற பொதுமக்கள்குடியரசு துணைத் தலைவரை வாழ்த்திய அதிமுகவை சேர்ந்த வேலுமணி குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்கோயம்புத்த... மேலும் பார்க்க

'தேர்தல் தோல்வி... பிரதமரிடம் இருந்து வந்த அழைப்பு..' - மனம் திறந்த சி.பி.ராதாகிருஷ்ணன்

சி.பி. ராதாகிருஷ்ணன் நாட்டின் குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று தமிழ்நாடு வந்தார். இன்று காலை கோவை வந்த அவருக்கு தொழில் அமைப்புகள் சார்பில் கொடிசியா அரங்கில் பாராட்டு விழா ந... மேலும் பார்க்க

'மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பு' - ஓபிஎஸ்-ஸின் கருத்து வியூகமா? குழப்பமா?

அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, தன் அரசியல் பயணத்தை 'அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' மூலம் தனித்துத் தொடங்கினார், ஓ.பி.எஸ். பா.ஜ.க தலைமையிலான தே.ஜ கூட்டணியில் இணைந்தார். எனினும், க... மேலும் பார்க்க