செய்திகள் :

ஜார்கண்ட்: `குழந்தைகளுக்கு HIV ரத்தம்?' - மருத்துவமனையின் அலட்சியத்தால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

post image

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாய்பாசா நகரில் ஒரு அரசு மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தலசீமியா என்பது இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்தியில் ஏற்படும் ஒரு மரபணுக் கோளாறு. அதாவது உடல் போதுமான அளவு ஹீமோகுளோபினை (Hemoglobin) உற்பத்தி செய்ய முடியாது.

இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, ரத்தம் மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்படும். அப்படி ரத்தம் மாற்று சிகிச்சையளிக்கப்பட்ட தலசீமியா நோய் பாதித்த குழந்தைகள் ஏழு பேருக்கு, எச்.ஐ.வி நோய் இருப்பது தெரியவந்திருக்கிறது.

ஜார்க்கண்ட் சாய்பாசா நகரில் அரசு மருத்துவமனை
ஜார்க்கண்ட் சாய்பாசா நகரில் அரசு மருத்துவமனை

ரத்தம் மாற்றும் போது மருத்துவர்களின் அலட்சியத்தால் எச்.ஐ.வி பாதித்த ரத்தம் குழந்தைகளின் உடலில் ஏற்றப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் தினேஷ் குமார் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு விசாரணையைத் தொடங்கியது. சதார் மருத்துவமனையின் இரத்த வங்கியையும், குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டையும் ஆய்வு செய்தது.

மேலும், சிகிச்சையில் உள்ள குழந்தைகள் குறித்த விவரங்களைச் சேகரித்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் தினேஷ் குமார், ``ஆரம்ப விசாரணையில் தலசீமியா நோய்க்கான சிகிச்சையில் இருந்த குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருந்த இரத்தம் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆய்வின்போது இரத்த வங்கியில் முன்னுக்குப் பின்னான சில விஷயங்கள் கண்டறியப்பட்டன. மேலும் அவற்றைச் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருக்கிறார்.

HIV
HIV

இந்த விவகாரம் குறித்து பேசிய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுஷாந்தோ மஜ்ஹி, ``குழந்தைகளுக்கு இரத்த வங்கியிலிருந்து சுமார் 25 யூனிட் இரத்தம் மாற்றப்பட்டுள்ளது. அசுத்தமான ஊசிகள் போன்ற பிற காரணிகளாலும் எச்.ஐ.வி தொற்று ஏற்படலாம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'SIR' எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (Bihar SIR)' மேற்கொள்ளப்பட்டிருந்தது பெரும் பரபர... மேலும் பார்க்க

கொடைக்கானல்: ‘அஞ்சு வீடு’ அருவி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

கொடைக்கானல் பேத்துபாறை பகுதியில் `அஞ்சு வீடு' அருவி இருக்கிறது. அதிகம் இந்த அருவி பற்றி வெளியே தெரியாத நிலையில் அருவி பற்றி வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களின் வழியாக இளைஞர்கள் தெரிந்துகொண்டு அதிகளவில் இங... மேலும் பார்க்க

"இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணிக்குச் செல்லும் மாநிலம் தமிழகம்"- தங்கம் தென்னரசு

விருதுநகர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில்... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: மூத்த ஐபிஎஸ் மீது காவல்துறை அதிகாரியின் மனைவி பாலியல் புகார்!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது காவல்துறை அதிகாரியின் மனைவி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் துன்புறுத்தியதாக புகார் அளித்திருக்கிறார்.2003-ம் ஆண்டு ஐபிஎஸ் அ... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் - பூவுலகின் நண்பர்கள் முன்வைக்கும் 10 கோரிக்கைகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.இதுதொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றுவருகிறது. அரசு மற... மேலும் பார்க்க

தேனி: ``மக்கள் பிரச்னைகளில் அலட்சியமாக செயல்படாதீர்கள்'' – அதிகாரிகளை விளாசிய ஆட்சியர்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது.இதில் பேசிய அதிகாரிகள், “தேனி மாவட்டத்தில் ஆண்டுக்கு 829.80 மி.ம... மேலும் பார்க்க