செய்திகள் :

'SIR' எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

post image

பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (Bihar SIR)' மேற்கொள்ளப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

'இது வாக்காளர் உரிமைகளை பறிக்கும் பாஜகவின் சதிச்செயல்'என இதற்கு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், ஆர்ஜேடி உள்பட பல எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

தேர்தல் ஆணையம்

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் SIR எனும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், "'SIR' எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தமாகிவிட்டது. மக்களின் வாக்குரிமையையே பறிக்கும் இந்த அநியாயம் ஏற்கெனவே பீகாரில் அரங்கேற்றப்பட்டதைப் பார்த்தோம். விழிப்புடன் இருந்து, கருப்பு சிவப்புக்காரர்கள்தான் தமிழ்நாட்டின் காவலுக்குக் கெட்டிக்காரர்கள் எனக் காட்ட வேண்டிய நேரம் இது.

இதற்காக, வரும் 28-10-2025 மாமல்லபுரத்தில் நடைபெறும் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பயிற்சிக் கூட்டத்தில் உடன்பிறப்புகளைச் சந்திக்க வருகிறேன். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நாம் உழைப்பை விதைத்தால்தான், மாநில அளவிலான வெற்றியை அறுவடை செய்ய முடியும்! வார்டு நிர்வாகி முதல் மாநில நிர்வாகி வரை ஒவ்வொருவரும் அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெற உழைப்போம், ஏழாவது முறையும் கழக ஆட்சியை அமைப்போம்!" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கொடைக்கானல்: ‘அஞ்சு வீடு’ அருவி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

கொடைக்கானல் பேத்துபாறை பகுதியில் `அஞ்சு வீடு' அருவி இருக்கிறது. அதிகம் இந்த அருவி பற்றி வெளியே தெரியாத நிலையில் அருவி பற்றி வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களின் வழியாக இளைஞர்கள் தெரிந்துகொண்டு அதிகளவில் இங... மேலும் பார்க்க

"இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணிக்குச் செல்லும் மாநிலம் தமிழகம்"- தங்கம் தென்னரசு

விருதுநகர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில்... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: மூத்த ஐபிஎஸ் மீது காவல்துறை அதிகாரியின் மனைவி பாலியல் புகார்!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது காவல்துறை அதிகாரியின் மனைவி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் துன்புறுத்தியதாக புகார் அளித்திருக்கிறார்.2003-ம் ஆண்டு ஐபிஎஸ் அ... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் - பூவுலகின் நண்பர்கள் முன்வைக்கும் 10 கோரிக்கைகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.இதுதொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றுவருகிறது. அரசு மற... மேலும் பார்க்க

தேனி: ``மக்கள் பிரச்னைகளில் அலட்சியமாக செயல்படாதீர்கள்'' – அதிகாரிகளை விளாசிய ஆட்சியர்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது.இதில் பேசிய அதிகாரிகள், “தேனி மாவட்டத்தில் ஆண்டுக்கு 829.80 மி.ம... மேலும் பார்க்க

‘ஸ்டாலின் முளைவிட வைத்தார்’ ‘பழனிசாமி நாற்றாகவே வளர்த்தார்’ ஆட்சிகள் மாறினாலும் வற்றாத விவசாயகண்ணீர்

அனைவருக்கும் பசுமை வணக்கம்... ‘விளைவித்த நெல் மூட்டைகளைச் சேமிக்க, போதுமான குடோன்கள் இல்லை, தார்ப்பாய்கள் இல்லை’ என்று விவசாயிகள் குமுறியதையெல்லாம் இரண்டு மாதங்களுக்கு முன்பே, இதே தலையங்கம் பகுதியில் ... மேலும் பார்க்க