செய்திகள் :

5 ஆம்னி பேருந்துகள்; விஜய்யுடன் சந்திப்பு; கரூரில் கிளம்பிய பலியானவர்களின் குடும்பத்தினர்

post image

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் கரூர் வந்து நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதாக இருந்த நிலையில், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு முடிவு மாற்றப்பட்டது. இந்நிலையில், நாளை சென்னை, மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார். இதற்காக, த.வெ.க கட்சி நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச்செல்ல 5 ஆம்னி பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி, இன்று காலை கட்சி நிர்வாகிகள் வாகனங்கள் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அழைத்து வந்தனர். அதன் பிறகு கரூரில் பிரசித்தி பெற்ற வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகள் மூலம் சென்னை புறப்பட்டனர்.

ஆம்னி பேருந்து
ஆம்னி பேருந்து

அதற்கு முன்னதாக, அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்ட பின்னர், ஓட்டுநர் பேருந்தின் சக்கரங்களுக்கு எலுமிச்சை கனி வைத்து, சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்ட பின் வாகனத்தை எடுத்துச் சென்றார். கரூர் மாவட்டத்தில் உயிரிழந்த 25-க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினர் அழைத்துச் செல்லப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக ஆம்புலன்ஸும் உடன் சென்றுள்ளன. அதேபோல், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேரின் குடும்பத்தினர் அந்தந்த பகுதிகளில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல் மீதமுள்ள நபர்கள் இன்று மாலை அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கட்சி நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை அழைத்துச் செல்லப்படும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, த.வெ.க தலைவர் விஜய் மாமல்லபுரம் பகுதியில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார்.

LIC - அதானி குறித்த தி வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டு - முழு விவரம்|Explained

'அதானி குழுமத்தில் எல்.ஐ.சி நிறுவனம் முதலீடு...'இது நேற்று காலை அமெரிக்க செய்தி நிறுவனமான 'தி வாஷிங்டன் போஸ்ட்'டில் வெளியான செய்திக் கட்டுரை. இது வெளியான நொடி முதல் இந்தியாவில் பல்வேறு புயல்களையும், ப... மேலும் பார்க்க

`விஜய்யை அதிமுக கூட்டணிக்கு அழைக்கவில்லை; ஆனால் வந்தால் வரவேற்போம்!'- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த கே.டி ராஜேந்திர பாலாஜி கூறியதாவது, “எடப்பாடி பழனிசாமி கூறும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு அதை செய்தால் இந்த அரசை நாங்கள் பாராட்டுவோம். அதை விடுத்துவிட்டு விளக்கம் ... மேலும் பார்க்க

'உயர்கல்வியை வணிகமயமாக்கும் மசோதாவை திரும்பப் பெறவேண்டும்' - தமிழ்நாடு அரசுக்கு திருமா அறிக்கை

தமிழ்நாடு அரசின் 'தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா'வை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்..."உயர்கல்வியை முற்றிலும் வணிகமயமாக்குவ... மேலும் பார்க்க

'எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்து, முழுநேர சினிமா விமர்சகராக மாறி..'- ஸ்டாலினை சாடும் பழனிசாமி

தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் செய்வது குறித்து விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி."நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் நெல் கொள்முதலில் தாமதமா? - விமர்சனங்களுக்கு தமிழ்நாடு அரசு பதில்

தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் குறித்து தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், "நெல் கொள்முதல் பணிகளை முந்த... மேலும் பார்க்க

LIC-ன்‌ ரூ.32,000 கோடி அதானி குழுமத்தில் முதலீடு செய்ய முயற்சியா?- எல்.ஐ.சி நிறுவனத்தின் பதில் என்ன?

அமெரிக்காவை சேர்ந்த செய்தி நிறுவனமான 'தி வாஷிங்டன் போஸ்ட்' சமீபத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.குற்றச்சாட்டுஅதாவது, இந்திய அதிகாரிகள் எல்.ஐ.சி நிறுவனத்தின்... மேலும் பார்க்க