செய்திகள் :

``ரஜினிக்குள்ள நீ எப்படி ஜாதியைக் கொண்டு வரலாம்னு விமர்சனம் பண்ணாங்க" - பா. ரஞ்சித்

post image

மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கும் 'பைசன்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து நேற்றைய தினம் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் பா. ரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ் எனப் படக்குழுவினர் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், "'கபாலி' பட சமயத்தில் 'உனக்கு எல்லாம் ரஜினி வாய்ப்பு கொடுத்தார், ரஜினியை வைத்து நீ எப்படி இந்த டயலாக் பேசலாம்'னு எழுதினாங்க.

Bison
Bison

அவ்வளவு மோசமாக விமர்சித்த பிறகு எனக்கு என்ன பண்றதுனு தெரியல. 'கபாலி' படத்தோட வெற்றி குறித்து தயாரிப்பாளர் தாணுவுக்கு தெரியும். 'கபாலி' ரிலீஸுக்கு முன்னாடியே 100 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய திரைப்படம்.

விமர்சன ரீதியாக மோசமாக இருந்த படங்களை வசூல் ரீதியாக வெற்றியாகக் கொண்டாடியிருக்காங்க.

ஆனா, 'கபாலி' படத்தை மிக மோசமாக விமர்சித்தாங்க. 'ஒரு நடிகரை நீ எப்படி இப்படி பேச வைக்கலாம். ரஜினிக்குள்ள நீ எப்படி ஜாதியைக் கொண்டு வரலாம்'னு எழுதினாங்க.

அதை உண்மையாகவே எப்படி கையாளணும்னு எனக்குத் தெரியல. 'கபாலி' வெற்றிப் படம், தோல்விப் படம் என்பதல்ல என்னுடைய பிரச்னை. இத்தனை ஆண்டுகள் என்னை இழிவாக விமர்சித்த சினிமா குறித்து ஏன் அவர்கள் கேள்வி எழுப்பல.

என்னுடைய வாழ்க்கையை வணிக ரீதியாக வெற்றிப் படத்தில் நான் கொடுத்தேன். அந்தப் படத்தோட திரையாக்கம் குறைபாடுகளை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.

Pa Ranjith
Pa Ranjith

மற்றபடி சூப்பர் ஸ்டார் நடிச்ச மற்ற எல்லா படங்களும் உங்களுக்கு சூப்பரானு தெரியல. நான் 'கபாலி' படத்தை நல்லா இயக்கினேன்னு அவர் நம்பினார். அது மிகப்பெரிய வெற்றிப் படம்னு நம்பி எனக்கு 'காலா' படத்தின் வாய்ப்பைக் கொடுத்தார்.

'கபாலி' படத்தை இவ்வளவு மோசமா விமர்சித்த பிறகு நான் ஒரு கமர்ஷியல் படம் கொடுத்திருக்கலாம். ஆனா, சூப்பர் ஸ்டாரை வைத்து நிலமற்ற மக்களுக்கு நில உரிமை கோருதல் குறித்தான விஷயத்தைப் பேசினேன்." என்றார்

Attagasam: ``ஏமாற்றமளிக்கிறது; தல விரும்பிகளின் நலம் விரும்பியாக நான்..." - இயக்குநர் சரண்

இயக்குநர் சரண் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `அட்டகாசம்'. அஜித், பூஜா, ரமேஷ் கண்ணா எனப் பலரும் இணைந்து நடித்திருந்த இத்திரைப்படம் 2004-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி பெரும்... மேலும் பார்க்க

``உங்களுக்கும் மணி சாருக்கும் இடையே இந்தி பாலமாகவும் நான் இருந்தேன்" - சுதா கொங்கராவின் பதிவு

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் `பராசக்தி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. பொங்கல் வெளியீட்டிற்காக படத்தின் வேலைகளையும் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.சுதா கொங்கராஇந்நிலையில், நீண்ட ... மேலும் பார்க்க

மாரி செல்வராஜ் செய்யும் 'இந்த' விஷயம் சாதாரணமானது அல்ல; எனக்கு ஆச்சரியமாக உள்ளது - பா.ரஞ்சித்

மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் 'பைசன்'. இந்தத் திரைப்படத்தின்‌ வெற்றிவிழா நேற்று சென்னையில் நடந்தது.இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பா.ரஞ்சித், "நான் சினிமாவிற்குள் வருவதற்கு முன், என்னுடைய வாழ... மேலும் பார்க்க

Bison: ``என்னிடம் அந்தக் கேள்வியை கேட்காதீர்கள்; இன்னும் மூர்க்கமாக வேலை செய்வேன்" - மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் 'பைசன்'.இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.... மேலும் பார்க்க

Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடையில் கொதித்த அமீர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் 'பைசன்'.இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.... மேலும் பார்க்க