செய்திகள் :

காட்டுப்பன்றிகளை விரட்ட கொதிக்கும் வெந்நீர், இரக்கமற்ற செயலால் கொந்தளிப்பில் ஆர்வலர்கள்

post image

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் கழிவு மேலாண்மை திட்டங்களை முறைப்படுத்தவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது. குடியிருப்புப் பகுதிகள் வணிக வளாகங்கள், மக்கள் கூடும் இடங்களில் உணவுக் கழிவுகள் கொட்டப்படுவதால் வனவிலங்குகளால் ஈர்க்கப்படுகின்றன.

கழிவு மேலாண்மை விழிப்புணர்வு

இந்தக் கழிவுகளை உண்ண மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளுக்கு வரும் கரடி, காட்டுப்பன்றி, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளால் மனித எதிர்கொள்ளல்கள் ஏற்படுவதுடன், அவற்றிற்கும் கடுமையான உடல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

மக்கள் வாழிடங்களில் வனவிலங்குகளின்‌ நடமாட்டத்தை தவிக்க உணவுக்கழிவுகளை முறையாக மேலாண்மை செய்வது மட்டுமே உரிய தீர்வு என வனவிலங்கு பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பேருந்து நிலையம் பகுதியில் திறந்தவெளியில் கொட்டப்படும் கழிவுகளை உண்ண காட்டுப்பன்றிகள் அதிகளவில் நடமாடி வரும் நிலையில்,

காட்டுப்பன்றிகள் மீது வெந்நீர் ஊற்றும் கொடூரம்

அவற்றை விரட்டுகிறோம் என்கிற பெயரில் கொதிக்கும் வெந்நீரை காட்டுப்பன்றிகள் மீது ஊற்றும் கடைக்காரர்களின் இரக்கமற்ற செயல் இயற்கை ஆர்வலர்களை கொந்தளிக்கச் செய்திருக்கிறது. காட்டுப்பன்றிகள் மீது இத்தகைய கொடூரத்தை நிகழ்த்தும் நபர்கள் மீது வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டு வருகின்றனர்.

Iceland: கொசுக்கள் இல்லாத நாட்டில் முதன்முறையாக கண்டறியப்பட்ட 3 கொசுகள் - என்ன காரணம்?

ஐஸ்லாந்தில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக முதல் முறையாக கொசுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நாடு, உலகில் கொசுக்கள் இல்லாத குளிர் பிரதேசங்களில் ஒன்றாக இருந்த நிலையில், தற்போது முதல் முறைய... மேலும் பார்க்க

சென்னை: பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கும் நுரை | Photo Album

Rain Updates: 'இந்த வாரம் முழுதும் மழை' - வடகிழக்கு பருவமழை தீவிரம்; எந்தெந்த மாவட்டங்களுக்கு Alert? மேலும் பார்க்க

தீபாவளிக்குப் பிறகான டில்லியின் கடும் புகை மூட்டம்; குறைந்தது எப்படி?

டில்லியின் காற்று மாசுப் பிரச்னை ஆண்டுதோறும் தீபாவளிக்குப் பிறகு தீவிரமடையும். இம்முறை நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மாசு உச்சத்தைக் கடந்தது. ஆனால், ஆச்சர்யமாக ஒரே நாளிலேயே காற்றின் தரம் மேம்பட்டத... மேலும் பார்க்க

சென்னை: தீபாவளி பட்டாசுகளால் புகை மூட்டம்; 400-ஐ தாண்டிய காற்று மாசுபாடு குறியீடு

தீபாவளி முடிந்துவிட்டது. நேற்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் நம்மைச் சுற்றிலும் ஏற்பட்ட புகை மூட்டத்தை நாமே நம் கண்களில் பார்த்திருப்போம்.சென்னையில் காற்று மாசுபாடு குறியீடு 400-ஐயும், கோவையில் காற்று ம... மேலும் பார்க்க