செய்திகள் :

உ.பி: மாணவியை சேர்க்க `கன்னித்தன்மை' சான்று கேட்ட மதரஸா நிர்வாகம்; பெற்றோர் போலீஸில் புகார்!

post image

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் என்ற இடத்தில் மதரஸா சார்பாக பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 13 வயது மாணவி படித்து வந்தார். அவர் கடந்த ஆண்டு 7வது வகுப்பு சேர்ந்த நிலையில் இந்த ஆண்டு 8வது வகுப்புக்கு தேர்ச்சி பெற்றார். மாணவியை அவரது தாயார் பள்ளிக்கு அழைத்துச்சென்றபோது மாணவிக்கு கன்னித்தன்மை சோதனை சான்று இருந்தால்தான் பள்ளியில் சேர்த்துக்கொள்வோம் என்று பள்ளி அட்மிஷன் பொறுப்பு அதிகாரி ஷாஜஹான் தெரிவித்தார். இது குறித்து மாணவியின் தாயார் பள்ளி நிர்வாகத்துடன் வாக்குவாதம் செய்தார். அதனை தொடர்ந்து இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார்.

அவர் இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் தந்தை கொடுத்துள்ள புகாரில்,'' பள்ளிக்கு செலுத்தவேண்டிய கட்டணம் ரூ.35 ஆயிரத்தை செலுத்திய பிறகு எனது மகளை 8வது வகுப்புக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர். அப்படி இருந்தும் மகளை பள்ளிக்கு அழைத்து சென்ற போது கன்னித்தன்மை சோதனை சான்று கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். எனது மனைவி அதனை எதிர்த்து வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு பள்ளியில் இருந்தவர்கள் எனது மனைவியை திட்டி அவமானப்படுத்தியதோடு அடித்துள்ளனர். அதோடு எனது மகளை பள்ளியில் இருந்து கட்டாயப்படுத்தி வேறு பள்ளியில் கொண்டுபோய் சேர்க்கும்படி கூறினர்.

சான்றிதழை வாங்க ரூ.500 கட்டணம் செலுத்திய பிறகும் பள்ளி நிர்வாகம் சான்றிதழை கொடுக்க மறுத்து வருகிறது''என்று குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் போலீஸார் போக்சோ சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அட்மிஷன் பொறுப்பாளர் ஷாஜஹானை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் மாணவியிடம் கன்னித்தன்மை சான்றிதழ் கேட்பது கிடையாது என்று பள்ளியின் செயலாளர் ஹசன் கான் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு Hit-and-Run வழக்கு: சிசிடிவி காட்சிகளால் சிக்கிய கன்னட நடிகை - என்ன நடந்தது?

சில வாரங்களுக்கு முன்பு, பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹிட்-அண்ட்-ரன் வழக்கில், விபத்தை ஏற்படுத்தியது பிரபல கன்னட நடிகையும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான திவ்யா சுரேஷ் என்பது தெரியவந்... மேலும் பார்க்க

``மூக்குத்தி, காதணி, மாங்கல்யம் தவிர வேறு தங்க நகைகள் வேண்டாம்'' - கிராமத்தினர் அதிரடி முடிவு; ஏன்?

உத்தரகண்ட் மாநிலம் ஜான்சர்-பவார் பழங்குடிப் பகுதியில் உள்ள கந்தர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஒரு புதிய கட்டுப்பாட்டை தங்களுக்குள் விதித்துள்ளனர். அதாவது திருமணங்கள், குடும்ப விழாக்களின்போது திருமணம்... மேலும் பார்க்க

``போனில் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கண்காணிக்கப்படும்'' - பாஜக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

மகாராஷ்டிராவில் அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தங்களைத் தயாராகிக்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே கட்சி தொ... மேலும் பார்க்க

2026ஆம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்? - பாபா வங்காவின் கணிப்பு!

பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பல்கேரிய கணிப்பாளர் பாபா வங்காவின் கணிப்புகள் இன்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.2025ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் பலவும், உலகளவில் பேசுபொருளானது. தற... மேலும் பார்க்க

நேரு ஸ்டேடியம் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சத்தை வழங்கிய டேனி ஷெல்டர்ஸ் & சேயோன் சாரிட்டபிள் டிரஸ்ட்

நேரு ஸ்டேடியம் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சத்தை வழங்கிய டேனி ஷெல்டர்ஸ் மற்றும் சேயோன் சாரிட்டபிள் டிரஸ்ட்சமூக நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டில் தனது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், டேனி ஷெல்... மேலும் பார்க்க

அப்போலோ: தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் சிகிச்சை

சென்னை அப்போலோ மருத்துவமனை, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் பொருத்தும் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது!சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை ... மேலும் பார்க்க