செய்திகள் :

LIC-ன்‌ ரூ.32,000 கோடி அதானி குழுமத்தில் முதலீடு செய்ய முயற்சியா?- எல்.ஐ.சி நிறுவனத்தின் பதில் என்ன?

post image

அமெரிக்காவை சேர்ந்த செய்தி நிறுவனமான 'தி வாஷிங்டன் போஸ்ட்' சமீபத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

குற்றச்சாட்டு

அதாவது, இந்திய அதிகாரிகள் எல்.ஐ.சி நிறுவனத்தின் கிட்டத்தட்ட ரூ.32,000 கோடி முதலீடுகளை அதானி நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான பரிந்துரையை முன்னெடுத்தனர்... அதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர் என்கிற குற்றச்சாட்டை வைத்தது.

அதானி
அதானி

அறிக்கை

இதற்கு பதிலளித்து எல்.ஐ.சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தி வாஷிங்டன் போஸ்ட் முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் அடிப்படையற்றது ஆகும்.

அது கூறுகின்ற மாதிரி எல்.ஐ.சி முதலீடுகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்வதற்கான எந்தவொரு ஆவணங்களையும், திட்டத்தையும் எல்.ஐ.சி நிறுவனம் வகுக்கவில்லை.

நிதி அமைச்சகமோ, வேறு எந்தத் துறையோ இந்த முடிவுகளில் தலையிடாது.

எல்.ஐ.சி நிறுவனம் தனது அனைத்து கொள்கைகளையும், முதலீட்டு முடிவுகளையும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டே வகுக்கும்... மேலும் அதில் பங்குதாரர்களின் நலனும் உள்ளடக்கியிருக்கும்.

இந்தக் குறிப்பிட்ட கட்டுரை எல்.ஐ.சி நிறுவனத்தின் பெயரையும், புகழையும் கெடுப்பதாக உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

``டிடிவி தினகரன் Expiry Date முடிந்த அரசியல்வாதி" - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து பாசனத்திற்காக அணையிலிருந்து 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள... மேலும் பார்க்க

Pallikaranai ஊழல்: Stalin சொன்னது வேறு நடப்பது வேறு | ஆதாரங்களை அடுக்கும் அறப்போர் ஜெயராமன்

பாதுகாக்கப்பட்ட நிலமாகக் கருதப்படும் ‘ராம்சார் குறியீடு’ பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தமிழ்நாடு அரசு முறைகேடாக அனுமதி வழங்கியுள்ளது என்றும் இதல் பல கோடி ரூபாய் ... மேலும் பார்க்க

3 வருஷம் சவுதியில் நடந்த கொடுமை: நெஞ்சை உலுக்கும் சம்பவம் | Kafala | Saudi

வெளிநாட்டுத் தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் வகையில், சவுதியில் 50 வருடங்களாக நடைமுறையில் இருந்த கஃபாலா என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களிக் செய்திகள் வைரலாகி வருகிறது. இந்நிலையில், ... மேலும் பார்க்க

`முதல்வருக்கு களங்கம் ஏற்படக்கூடாதுனு அமைதியா.!' - துரைமுருகன் பேச்சால் செல்வப்பெருந்தகை காட்டம்

வடகிழக்கு பருவமழையால் கடந்த 10 நாள்களாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இதனால் அணைகள், ஏரி போன்ற நீர்நிலைகள் நிரம்பிவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் ஆங்காங்கே தி... மேலும் பார்க்க