செய்திகள் :

`இறந்துகிடந்த 50 மயில்கள்'- விவசாயி கைது

post image

சங்கரன்கோவில் அருகே குருவிக்குளத்தில் 50 மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து புளியங்குடி சரக வனத்துறையினர், வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் அங்குள்ள தோட்டங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு தோட்டத்தில் மயில்கள் இறந்தது கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின் அந்தப் பகுதியில் விவசாயம் செய்யும் குருவிக்குளம் அருகே மீனாட்சிபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த ஜான்சன் என்பவரிடம் விசாரிக்கையில், குருவிக்குளத்ததைச் சேர்ந்த பாக்கியராஜ், ரவி என்பவருக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, வாழை, எலுமிச்சை போன்றவற்றை பயிர்செய்து வந்துள்ளார்.

ஜான்சன்

இங்கு சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருக்கிறார். அதை எலியும், மயிலும் நாசம் செய்துள்ளது. இதனால் விவசாயம் பாதிப்பதாகக் கூறி எலிகளை கொல்ல கழுகுமலையில் எலி மருந்து வாங்கி மக்காச்சோளத்தில் கலந்து தோட்டம் முழுவதும் வைத்துள்ளார். அந்த மக்காச்சோளத்தை மயில்கள் உண்டதில் 50 மயில்கள் பரிதாபமாக உயிரிழந்தன. பின் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு இறந்து கிடந்த மயில்களை எடுத்து உடற்கூறு ஆய்வு செய்தனர். விசாரணைக்கு பின் ஜான்சன் மீது வழக்குபதிவு செய்து சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தேசிய பறவையை விஷம் வைத்து கொன்ற சம்பவம் குருவிகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sabarimala: உண்ணிகிருஷ்ணன் போற்றி வாக்குமூலம்; பெல்லாரி நகைக்கடையில் மீட்கப்பட்ட சபரிமலை தங்கம்!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் மற்றும் தங்க வாசல் செய்ததில் தங்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அது சம்பந்தமாக சிறப்பு விசாரணைக்குழு 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இந்த ... மேலும் பார்க்க

ஆரணி: மனைவியை பிரிந்து மாணவி மீது காதல் - அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்; மாணவியின் தந்தை வெறிச்செயல்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்துள்ள முக்குறும்பை ஊராட்சிக்குஉட்பட்ட அனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலன் (வயது 27). தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்துவந்த வடிவேலனுக்கு கடந்த இரண்டு ஆண்ட... மேலும் பார்க்க

உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்தியா வந்த ஆஸி, வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - இந்தூர் இளைஞர் கைது

நடப்பு மகளிர் உலகக்கோப்பையில் இந்தியாவில் தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் இரண்டு வீராங்கனைகள் மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.Australia Women's Teamகடந்த செப்டம்பர் 30 ஆம் ... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் வேறு நபருடன் பழக்கம்? - 9 ஆண்டு காதலியை குத்தி குத்திக் கொன்று தற்கொலை செய்த வாலிபர்

மும்பை பரேல் பகுதியை சேர்ந்தவர் சோனு(24). வேலை இல்லாத சோனு ஏதாவது கேட்டரிங் வேலைகளுக்கு செல்வது வழக்கம். இவர் அதே பகுதியில் வசிக்கும் மனிஷா யாதவ்(24) என்ற பெண்ணை கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தார். ம... மேலும் பார்க்க

கோவை: `பல பெண்களுடன் தொடர்பு; முதல் திருமணத்தை மறைத்து.!’- காவலர் மீது புகார் அளித்த மனைவி

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா தேவி (26) . இவர் கோவை டிஜிபி அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அந்த மனுவில், “எனக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு போத்தனூர் காவல் நிலையத்த... மேலும் பார்க்க

`சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டவில்லை; பணமும் பறிக்கவில்லை' - ரியாவுக்கு சிபிஐ நற்சான்று

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இத்தற்கொலைக்கு சுஷ... மேலும் பார்க்க