செய்திகள் :

கொடைக்கானல்: ‘அஞ்சு வீடு’ அருவி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

post image

கொடைக்கானல் பேத்துபாறை பகுதியில் `அஞ்சு வீடு' அருவி இருக்கிறது. அதிகம் இந்த அருவி பற்றி வெளியே தெரியாத நிலையில் அருவி பற்றி வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களின் வழியாக இளைஞர்கள் தெரிந்துகொண்டு அதிகளவில் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் அஞ்சு வீடு அருவியில் குளிப்பதற்காக கோவையைச் சேர்ந்த 11 மருத்துவ மாணவர்கள் வந்திருக்கிறார்கள். அதில் நந்தகுமார் என்பவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதையடுத்து நான்கு நாட்களுக்கு பிறகே நந்தகுமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.  

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சுற்றுலாத்துறையினர் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தராததாலேயே கடந்த ஐந்து வருடங்களில் இந்த அருவியில் குளிக்க வந்து 14 பேர் இறந்திருக்கிறார்கள் என்று அஞ்சு வீடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சுற்றுலாத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று சுற்றுலாத்துறையினர் இந்த பகுதியை ஆய்வு செய்து, “ யூ-டியூப் வீடியோக்களில் பார்த்துவிட்டு இளைஞர்கள் இங்கு வருகை தருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே சுற்றுலாத் துறை அனுமதி இல்லாத இந்த அருவிக்கு வர வேண்டாம்" என தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன்

இந்நிலையில் இங்கு தடுப்பு வேலிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற இருப்பதாகவும் அதுவரை இந்த அஞ்சு வீடு அருவி தடை செய்யபட்ட அருவியாக அறிவிக்கபடுகிறது என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் கொடைக்கானலைச் சுற்றியுள்ள அரசால் அங்கீகரிக்கபடாத அருவிகள் அனைத்தும் தடை செய்யபட்ட பகுதிகள் எனவும் இந்தப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களை அழைத்து வரும் வழிகாட்டிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

"இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணிக்குச் செல்லும் மாநிலம் தமிழகம்"- தங்கம் தென்னரசு

விருதுநகர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில்... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: மூத்த ஐபிஎஸ் மீது காவல்துறை அதிகாரியின் மனைவி பாலியல் புகார்!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது காவல்துறை அதிகாரியின் மனைவி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் துன்புறுத்தியதாக புகார் அளித்திருக்கிறார்.2003-ம் ஆண்டு ஐபிஎஸ் அ... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் - பூவுலகின் நண்பர்கள் முன்வைக்கும் 10 கோரிக்கைகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.இதுதொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றுவருகிறது. அரசு மற... மேலும் பார்க்க

தேனி: ``மக்கள் பிரச்னைகளில் அலட்சியமாக செயல்படாதீர்கள்'' – அதிகாரிகளை விளாசிய ஆட்சியர்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது.இதில் பேசிய அதிகாரிகள், “தேனி மாவட்டத்தில் ஆண்டுக்கு 829.80 மி.ம... மேலும் பார்க்க

‘ஸ்டாலின் முளைவிட வைத்தார்’ ‘பழனிசாமி நாற்றாகவே வளர்த்தார்’ ஆட்சிகள் மாறினாலும் வற்றாத விவசாயகண்ணீர்

அனைவருக்கும் பசுமை வணக்கம்... ‘விளைவித்த நெல் மூட்டைகளைச் சேமிக்க, போதுமான குடோன்கள் இல்லை, தார்ப்பாய்கள் இல்லை’ என்று விவசாயிகள் குமுறியதையெல்லாம் இரண்டு மாதங்களுக்கு முன்பே, இதே தலையங்கம் பகுதியில் ... மேலும் பார்க்க

"பாஜக 'Compose' செய்த பாட்டுக்கு டான்ஸ் ஆட ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார்" - விஜய்யை சாடிய கருணாஸ்

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப் பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்தக் கரூர் கூட்ட நெரிசல் சம்ப... மேலும் பார்க்க