செய்திகள் :

Sabarimala: உண்ணிகிருஷ்ணன் போற்றி வாக்குமூலம்; பெல்லாரி நகைக்கடையில் மீட்கப்பட்ட சபரிமலை தங்கம்!

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் மற்றும் தங்க வாசல் செய்ததில் தங்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அது சம்பந்தமாக சிறப்பு விசாரணைக்குழு 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இந்த 2 வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் முதல் பெயராக உண்ணிகிருஷ்ணன் போற்றி பெயர் உள்ளது. சபரிமலை உபயதாரராக வலம் வந்த உண்ணிகிருஷ்ணன் போற்றி கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த வழக்கில் தங்க கவசங்களை செம்பு என ரெஜிஸ்டரில் பதிவுசெய்த சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆபீசர் முராரி பாபு கைது செய்யப்பட்டுள்ளார். துவார பாலகர் தங்க கவசம் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் 2-வது இடத்திலும், தங்க வாசல் மோசடி வழக்கில் 6-வது இடத்திலும் முராரி பாபு பெயர் உள்ளது. இந்த நிலையில் சபரிமலை கோயிலில் உள்ள 476 கிராம் எடையுள்ள தங்கம் கர்நாடகா மநிலம் பெல்லாரியில் உள்ள கோவர்த்தன் என்பவரது நகைக்கடையில் விற்பனை செய்ததாக உண்ணிகிருஷ்ணன் போற்றி வாக்குமூலத்த்தில் தெரிவித்துள்ளார்.

உண்ணிகிருஷ்ணன் போற்றி

இதையடுத்து உண்ணிகிருஷ்ணன் போற்றியையும் அழைத்துக்கொண்டு நேற்று காலை பெல்லாரி சென்ற சிறப்பு விசாரணைக்குழு கோவர்த்தனின் நகைக்கடையில் இருந்து சுமார் 400 கிராம் தங்கக்கட்டிகளை மீட்டுள்ளது. நகைக்கடை உரிமையாளர் கோவர்த்தனை எஸ்.ஐ.டி விசாரணை நடத்தியது. அதில் சபரிமலை தங்கம் கொள்ளைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும், தங்கத்தை வாங்க மட்டுமே செய்ததாகவும் கோவர்த்தன் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரும் விசாரணை வளையத்தில் உள்ளார்.

கைதுசெய்யப்பட்ட முராரிபாபு

சபரிமலையில் கொள்ளையடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எடையில் கோவர்த்தனின் நகைக்கடையில் இருந்து தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர திருவனந்தபுரத்தில் உள்ள உண்ணிகிருஷ்ணன் போற்றியின் வீட்டில் இருந்து தங்க நாணயங்களும், இரண்டு லட்சம் ரூபாயும் கண்டுபிடிக்கப்பட்டன. உண்ணிகிருஷ்ணன் போற்றியை வரும் 30-ம் தேதிவரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்துவிட்டு, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும். எனவே அதற்குள் சபரிமலை தங்கம் கொள்ளை குறித்த கூடுதல் தகவல்களை அவரிடம் இருந்து வெளிக்கொண்டுவர சிறப்பு விசாரணைக்குழு முடிவு செய்துள்ளது.

ஆரணி: மனைவியை பிரிந்து மாணவி மீது காதல் - அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்; மாணவியின் தந்தை வெறிச்செயல்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்துள்ள முக்குறும்பை ஊராட்சிக்குஉட்பட்ட அனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலன் (வயது 27). தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்துவந்த வடிவேலனுக்கு கடந்த இரண்டு ஆண்ட... மேலும் பார்க்க

உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்தியா வந்த ஆஸி, வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - இந்தூர் இளைஞர் கைது

நடப்பு மகளிர் உலகக்கோப்பையில் இந்தியாவில் தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் இரண்டு வீராங்கனைகள் மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.Australia Women's Teamகடந்த செப்டம்பர் 30 ஆம் ... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் வேறு நபருடன் பழக்கம்? - 9 ஆண்டு காதலியை குத்தி குத்திக் கொன்று தற்கொலை செய்த வாலிபர்

மும்பை பரேல் பகுதியை சேர்ந்தவர் சோனு(24). வேலை இல்லாத சோனு ஏதாவது கேட்டரிங் வேலைகளுக்கு செல்வது வழக்கம். இவர் அதே பகுதியில் வசிக்கும் மனிஷா யாதவ்(24) என்ற பெண்ணை கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தார். ம... மேலும் பார்க்க

கோவை: `பல பெண்களுடன் தொடர்பு; முதல் திருமணத்தை மறைத்து.!’- காவலர் மீது புகார் அளித்த மனைவி

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா தேவி (26) . இவர் கோவை டிஜிபி அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அந்த மனுவில், “எனக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு போத்தனூர் காவல் நிலையத்த... மேலும் பார்க்க

`சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டவில்லை; பணமும் பறிக்கவில்லை' - ரியாவுக்கு சிபிஐ நற்சான்று

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இத்தற்கொலைக்கு சுஷ... மேலும் பார்க்க

``வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.3 லட்சம்'' - கையும் களவுமாக சிக்கிய நாகர்கோவில் இன்ஸ்பெக்டர்

நேசமணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜன் என்ற சந்தை ராஜன் என்பவர் மீது நேசமணி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது. அந்த வழக்கில் இருந்து சந்தை ரா... மேலும் பார்க்க